Sunday, February 27, 2011

தமிழ்4: புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செலவன் படுகொலைக்கு பின்னால்!

தமிழ்4: புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செலவன் படுகொலைக்கு பின்னால்!

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்! தோடரும் பாகம் 3-- நாளை பாகம் 4



Tor – The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் ‘இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?’ என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;) .
முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.Tor – The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் ‘இலவச மென்பொருள்’ என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :) .
Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் ‘Relay’ என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய,
குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.
இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.


பாகம் 2
தொடரும்-- நாளை பாகம் 4
நன்றி: சுடுதண்ணி

Saturday, February 26, 2011

பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்



இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும்.

ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.

ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருப்பின் பழுதடைந்த சிடியிலிருந்து தகவல்களை ஒரளவாக நல்ல நிலையில் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதைப்போல பழுதான சிடியிலிருந்து வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுக்கும் இலவச மென்பொருள் தான் Get My videos Back . இந்த மென்பொருள் சிறப்பான முறையில் பெரும்பாலான தகவல்களை மீட்டுத்தருகிறது. (Recovering data) இதன் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பழுதானவற்றிலிருந்து கணிணிக்கு சேமித்துக் கொள்ளலாம்.

Source என்பதில் பழுதான சிடியுள்ள இடத்தையும் Target என்பதில் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதையும் தேர்வு செய்து Open start என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். தகவல்களை மீட்டெடுக்கும் போது அதன் காப்பி செய்யும் செயல்பாட்டை நமக்கு காட்டுகிறது.

இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற சுதந்திர மென்பொருளாகும் (Open source). Avi, mkv, mp3 போன்ற முக்கிய வீடியோ வகைகளை இந்த மென்பொருள் ஆதரிக்கின்றது.
தரவிறக்கச்சுட்டி : Download Get My Videos Back

தொடர்புடைய பதிவுகள் :
1.பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
2.My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய


நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு
http://www.blogger.com/img/blank.gif
1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

ஓன்லைனில் 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள


இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஓன்லைன் மூலமாக பறிமாறிக் கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன.

அவை அனைத்தும் குறைந்த அளவுடைய கோப்புகளை மட்டுமே பறிமாறிக் கொள்ள அனுமதிக்கும். ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு நாளைக்கு 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு கோப்புடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும். அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக் கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக் கொள்ள முடியும்.

ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும்.

இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும்.

பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்http://www.blogger.com/img/blank.gifடிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல கோப்புகளை ஒருங்கிணைத்து Compress செய்து கொள்ள முடியும். இதற்கு கோப்புகளை தேர்வு செய்து கொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ள முடியும்.

இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து வைப்பதுடன், நண்பர்களுக்கு இந்த கோப்புகளின் லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக் கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.

இணையதள முகவரி

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்! தோடரும் பாகம் 2-- நாளை பாகம் 3


பகுதி 2

ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, ‘ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?’ என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது ‘விக்கிலீக்ஸ்’.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே “It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police” என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D .
இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே ‘ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்’ என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே ‘சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்’ என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். ‘வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்’, இவை ஜூலியனின் உபதேசங்கள்.
விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் ‘ஓ..ஒரு தெய்வம்… படி தாண்டி வருதே..’ என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் ‘விக்கிலீக்ஸ்’.

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக
மாறிவிட்டது. பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.

பாகம் 1
தொடரும்-- நாளை பாகம் 3
நன்றி: சுடுதண்ணி

பிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் கோப்பாயில் மீட்பு தாயும் மேலும் மூவரும் கைது (படங்கள் இணைப்பு)



பிறந்த உடனே புதைக்கப் பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சட லமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின்னர் சிகிச்சைக்காக தாயார் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிசுவின் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் தீவிர விசாரணைகளை நடத்திய நீதிவான், சிசுவைப் பிரசவித்த போது தாயார் பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த உடைகள் மற்றும் மருந்துக் குளிகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.

சிசுவின் சடலத்தைப் புதைத்தவர் என்று கூறப்படும் ஆண் மற்றும்அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாயை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

சிசுவைப் பெற்றெடுத்த தாயின் மற்றொரு மகளான சிறுமியை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைத்து சிறுவர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையில் சம்பவம் பற்றித் தெரிய வந்ததாவது:

இணுவிலில் வசித்து வந்த உதயகுமார் என்ற 42 வயதுடைய பெண், கடந்த 18ஆம் திகதி தொடக்கம் கோப்பாய் வடக்கு புதிய சந்தைக்கு அருகிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரலிங்கம் என்பவர் 3 வருடம் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் 23ஆம் திகதி நள்ளிரவு வேளை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அவருடன் தங்கியிருந்த நபர் வீட்டின் பின்புறம் நிலத்தில் புதைத்துள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு சென்று குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நீதிவானுக்குத் தகவலையும் வழங்கினர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தேக நபரான பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது.

நான் எனது கணவர் அல்லாத ஒருவருடன் தற்பொழுது வசித்து வருகின்றேன். கர்ப்பம் தரிப்பதனைத் தடுப்பதற்காக கல்வியங்காடு சந்தியிலுள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்டேன். எனினும் எப்படியோ கர்ப்பம் தரித்து விட்டேன். அதனால் வேறு இடத்தில் கர்ப்பத்தைக் கலைக்க முயன்றேன். நேற்றுமுன்தினம் தீடீரென நள்ளிரவு வேளை வயிற்றுக்குத்து ஏற்பட்டு குறைமாதமாக சிசு இறந்த நிலையில் பிறந்தது. என்னுடன் தங்கியிருந்தவர் அந்தச் சிசுவை புதைத்தார். இப்படி அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள்

வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?


சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டில் முதல் ஐந்தாண்டுகள் மிதமாகவும், ஆறாம் ஆண்டிலிருந்து வெப்பத்தால் ஏற்படும் சூரியகாற்றின் அளவு உச்சமாகவும் இருக்க வேண்டும். கடைசியாக 2001 ல் சூரியகாற்று அதிக உச்சத்தில் இருந்தது. தற்போது நடக்கும் 23வது சுற்றில் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை சூரியன் அமைதியாக இருக்கிறது. எனவே 24வது சுற்றில் சூரியன் மூலம் பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமானது பேராற்றலாக சூரியனிலிருந்து பொங்கி பரவும். இவை சிலநேரங்களில் 50ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு "பிளாஸ்மா' எனும் எரிமலை குழம்பு போல பரவும். ஆனால், சூரியனிலிருந்து விடுபட முடியாமல் அதைச் சுற்றி வட்ட வளையமாக மாறி விடும். இதிலிருந்து வெளியேறும் வெப்பமான ஜூவாலை நிரம்பிய காற்று (சேலார் வின்ட்) பூமியை தாக்க முற்படும். பூமியின் அமைப்பே இயற்கையாக நம்மை பாதுகாக்கிறது. பூமியில் உள்ள மின்காந்த கோளம் (மாக்னடோ ஸ்பியர்) சூரியகாற்று பூமிக்குள் வராமல் தடுக்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் பூமியின் வலிமை 10 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாற்று பூமிக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு ஊடுருவினால், அவை மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. அவ்வாறு ஏற்படுவதற்கு முன், வானம் மிக வெளிச்சமாகவும், இரவில், அதிகாலையில் பச்சை, நீல வண்ணங்களும் தெளிவாக தெரியும்.

கடந்த 1989ல் கனடாவின் "கியூபெக்' பகுதியில் இவ்வகை மின்சாரம் (ஜீரோ கரண்ட்) பாய்ந்து "டிரான்ஸ்பார்மர்' செயலிழந்தது. அப்பகுதியில் பச்சை, நீல வண்ணங்கள் (ஆரோமா) காணப்பட்ட பிறகே, இச்சம்பவம் நிகழ்ந்தது. தற்போது புவியின் மின்காந்த கோளத்தின் பலவீனமடைந்த பகுதி வழியாக சூரியகாற்று ஊடுருவியுள்ளது. வரும் 2012, டிச., 21ம் தேதி, 24வது முறையாக 11ஆண்டு சுழற்சி ஆரம்பிக்கிறது. கடந்த செப்., 2010ல் எடுக்கப்பட்ட படங்களில், சூரியனின் பேராற்றல் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. எனவே பூமிக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வானில் வெளிச்சம் அதிகமாகி, வண்ணங்கள் தோன்றினால் சூரிய சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. சூரியனின் வெப்பக்காற்று நேரடியாக பூமியை தாக்கும் போது முதலில் "டிரான்ஸ்பார்மர்கள்' தான் பாதிக்கப்படும். இவற்றை சரிசெய்ய பல மாதங்களாகலாம். இதனால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இரவில் இருளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக மனிதநேயம் குறைந்து விடுவதால், சண்டை, சச்சரவுகளாலும் அழிவு ஏற்படும். கடலில் மீண்டும் சுனாமி உருவாகும். பூமியின் தட்டடுக்குகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் பூகம்பம் ஏற்படும். இவையெல்லாம் உறுதியாக வரும் என்று கூறமுடியவில்லை.

அழிவை தடுப்பதற்கு தற்போதைய ஒரே வழி, வானில் வண்ணம் தோன்றினால், அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், சாட்டிலைட் இணைப்புகளை நிறுத்திவிட வேண்டும். வெப்பக்காற்றின் தாக்கம் குறையும் வரை இவ்வாறு செய்தால் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இதுகுறித்து காந்திகிராம் கிராமிய பல்கலை இயற்பியல் பேராசிரியர் சிவராமன் கருத்தரங்கில் கூறுகையில்,"" விஞ்ஞான ஆய்வுகளின் கூற்றும், புராணத்தில் கூறப்படும் கதைக்கூற்றும் ஒரே மாதிரியாக உள்ளது. இது அப்படியே நடக்கும் என்று கூறமுடியாது. சூரியனின் வெப்பக்கதிர்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், சூரியகாற்றின் பேராற்றலை கண்டுபிடித்துள்ளனர். 1989லிலேயே இப்பிரச்னை தோன்றியதால், அதை சமாளிக்கும் வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து பயப்படவும் வேண்டாம்,'' என்றார்.

சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சுற்றித் திரியும் பிரபாகரனின் ஆவி


கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கொண்டிருக்கும் உறவு தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை இன்னொருமுறை எடுத்து கருணாநிதியினால் இனியும் ஒருமுறை மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அப்பத்தியின் முழுவிபரமாவது,

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மிக முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதலை நடாத்துவதற்காகச் சதித்திட்டம் தீட்டுவதாக இந்திய உள்துறை அமைச்சு அந்த நாட்டினது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என அண்மையில் இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்மீது தாக்குதல் நடாத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இந்து பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினைப் படுகொலைசெய்வதற்குத் திட்டமிடுகிறார்கள் என 2010ம் ஆண்டு டிசம்பரில் இதே இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. தென்னிந்தியாவில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் இன்னொரு இலக்கு தமிழ்நாட்டுமுதல்வர் கருணாநிதிதான் என இந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் இந்து செய்தி வெளியிட்டிருந்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மறைந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை தமிழ்நாட்டு காவல்துறை ஆணையாளர் லத்திகா சரண் மறுத்திருந்தார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் இடம்பெறும் வேளையில் அரசியல் தலைவர்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடாத்துவார்கள் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார் அவர்.

அது இவ்வாறிருக்க தமிழ்நாட்டில் கருணாநிதிக்கும் அவரது காங்கிரஸ் கூட்டணிக்குமான ஆதரவு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குறைவடைந்துவரும் நிலையில் தமிழ்நாட்டு வாக்காளர்களின் அனுதாபத்தினைப் பெறும் வகையில் ஊடகங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன என தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அதேநேரம் 2009ம் ஆண்டு சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் கருணாநிதியும் அவரது காங்கிரஸ் கூட்டணியும்தான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு கொழும்பு அரசாங்கத்திற்கான உதவிகளை வழங்கி நின்றதாக இந்த எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

இது இவ்வாறிருக்க மே 2009ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்துக்களை வெளியிட்டமையினாலேயே கருணாநிதி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தினை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்தியிருப்பினும் கருணாநிதியோ அன்றி அவரது காங்கிரஸ் கூட்டணியோ போரை நிறுத்தும் வகையிலான உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை எதிர்த்துக் கருத்துக்களைத் தெரிவித்த அதேநேரம் கருணாநிதியோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போராட்டங்களைக்கூட தமிழ்நாட்டில் நடாத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காகத் தனது நிலைப்பாட்டினைத் திடீரென மாற்றிக்கொண்ட ஜெயலலிதா கருணாநிதியினை விட விடுதலைப் புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களோ சிறிலங்காவில் போரை நிறுத்துவதற்கு உண்மையான முனைப்புக்களை மேற்கொண்டவர் கருணாநிதிதான் எனக் கூறி அவருக்கே வாக்களித்தனர். காங்கிரசினது கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட கருணாநிதி தமிழ்நாட்டில் அதிக ஆசனங்களை வென்றெடுத்தார். ஆனால் கருணாநிதி தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இன்றுதான் தமிழ்நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கொண்டிருக்கும் உறவு தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை இன்னொருமுறை எடுத்து கருணாநிதியினால் இனியும் ஒருமுறை மக்களை ஏமாற்ற முடியாது.

தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை இலக்குவைக்கப் போகிறார்கள் எனக்கூறி தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தினைப் பெறுவதுதான் கருணாநிதிக்கும் அவரது காங்கிரஸ் கூட்டணியும் இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரேயொரு தீர்வு.

இது இவ்வாறிருக்க தற்போது அமெரிக்காவில் வசித்துவருகின்ற விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தலைவரான உருத்திரகுமாரனுடன் இந்தியாவினது புலனாய்வுக் கட்டமைப்புக்கள் தொடர்புகளை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

அதேபோல பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் உலகத் தமிழர் பேரவையுடனும் இந்தியப் புலனாய்வாளர்கள் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர நோர்வேயினைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நெடியவனது செயற்பாடுகளும் நோர்வே நாட்டினது புலனாய்வுகள் கட்டமைப்பின் ஊடாக இந்தியா கண்காணித்து வருகிறது. பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்டு செயற்படும் உலகத் தமிழர் பேரவை ராகுல்காந்தியுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயல்வதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ்நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ எந்தவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களும் நடக்காது என்ற உறுதிமொழியினை புலம்பெயர் நாடுகளில் செயற்படும் புலிகளின்
கட்டமைப்புக்களிடமிருந்து இந்திய உளவுத்துறை பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், புலம்பெயர்நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ்ப் புலிகளின் கட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ இதுபோன்ற தாக்குதல்களை நடாத்துமித்து இது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் ஆதரவுக் கட்டமைப்பினைப் பெரிதும் பாதித்துவிடும்.

இந்தியா மீது தாக்குதலை நடாத்துவதற்கான தளமாக விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகள் புலம்பெயர் நாடுகளைப் பயன்படுத்துவதற்கு அவை ஒருபோதும் அனுமதிக்காது.

தாங்கள் பயங்கரவாதம்சார் செயற்பாடுகளில் ஈடுபடுமிடத்து அதுபோன்றதொரு சூழமைவினைச் சிறிலங்கா நிச்சயமாக முறைகேடாக பயன்படுத்தும் என புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளும் உருத்திரகுமாரனும் இந்திய உளவுத்துறையினருக்கு எடுத்துக்கூறியிருக்கக் கூடும்.

மே 2009ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலானது பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது இடம்பெற்றது. இந்த ஆண்டு மே மாதம் இடம்பெறவிருக்கும் தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் பிரபாகரன் இல்லாததொரு சூழமைவில் இடம்பெறவுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இடம்பெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான பரப்புரைகளின் போது சிறிலங்காவினது தமிழர்களது பிரச்சினை மிகவும் முக்கியமானதொரு அம்சமாக விளங்கும்.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை மாத்திரமின்றி, பிரபாகரனது தாயார் மறைந்த சம்பவம் கூட தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் பரப்புரைகளில் இடம்பெற்றிருக்கும்.

கருணாநிதியினது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒருவர் பிரபகாரனது தாயாரின் மறைவுக்குத் தனது அனுதாபத்தினைத் தெரிவித்திருக்கிறார். கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருக்கும் திருமாவளவன் பிரபாகரனது தாயாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சிறிலங்காவிற்குப் பயணமாகவிருந்தார். பார்வதியம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கொழும்பு சென்ற திருமாவளவன் கொழும்பு வானூர்தி நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

மே 2009ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரபாகரனது நிழல் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை எவ்வாறு பாடாய்ப் படுத்தியதோ அதேபோல இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அவரது ஆவி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிகிறது.

puthinappalakai.com

Friday, February 25, 2011

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்-விக்கிலீக்ஸ் மர்மங்கள்! தொடரும்-- நாளை பாகம் 2


“எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்”

- ஜூலியன்.

பகுதி 1
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தண்ணியடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் ‘விக்கிலீக்ஸ்’ (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

விக்கி’ என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.

உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் ‘ஆளடி’ அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :) . ‘சர்வ அதிகாரமும் படைத்த’ என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் ‘அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்’ என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. ‘தொழில்நுட்பம்’!!!.

‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல’ என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D . விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே ‘வெட்டிப் போடும்’ தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.

விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.

விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;) , போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்….

தொடரும்-- நாளை பாகம் 2

நன்றி: சுடுதண்ணி

"80 கேட்டால் 48 தான் தர முடியும் என்பதா?': தி.மு.க., பார்முலாவை ஏற்க சோனியா மறுப்பு


"சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 48 "சீட்'கள் வழங்கப்படும்; ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கையை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்கலாம்' என்ற தி.மு.க.,வின் திட்டத்தை, காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டது. 80 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், 48 தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்தது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க, முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும்; அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்' என, தி.மு.க.,வுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரசின் ஐவர் குழு உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் சோனியாவிடம் விளக்கினர். தி.மு.க.,வின் நிலை குறித்து, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, "காங்கிரசுக்கு கூட்டணியில் 48 தொகுதிகள் வழங்கப்படும். கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணியில் இல்லாததால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகள் கைவசம் உள்ளன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் வழங்கியது போக, மீதமுள்ள இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படும். ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு தற்போது எழவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவசியம் ஏற்படும்போது, அது குறித்து பேசிக் கொள்ளலாம்' என்று, சோனியாவிடம் தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரசுக்கு 80 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்திய நிலையில், 48 தொகுதிகள் மட்டும் ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்ததால் காங்கிரஸ் கோபமடைந்துள்ளது. எனவே, புதிய மாற்றுத் திட்டத்துடன் அணுகுமாறு தி.மு.க.,வை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல பொறுப்பாளருமான அழகிரி, தென் மாவட்டங்களின் சார்பில், தி.மு.க.,வின் நிலையை முதல்வரிடம் தெரிவித்தார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசின் திட்டங்களால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளினால் ஏற்படும் கூடுதல் பலம் ஆகியன குறித்து கட்சி தலைமையிடம் விவரித்தார். வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மாவட்டச் செயலர்களுடன், துணை முதல்வர் ஸ்டாலின் கருத்து கேட்டார். இதுதவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கருத்துக்களையும் ஸ்டாலின் கேட்டார். இந்த ஆலோசனைகள் மூலம், காங்கிரஸ் கேட்டுள்ள புதிய மாற்றுத் திட்டத்தை தி.மு.க., வகுத்து வருகிறது. இத்திட்டம், காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்குமா? என்பது விரைவில் தெரியும். மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வது தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்காது என்பதால், கூட்டணியை தொடருவதற்கான முயற்சிகளை தி.மு.க., எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

-தினமலர்-

லண்டனில் தாய்ப்பால் மூலம் தயாரான ஐஸ்கிரீம் விற்பனை


லண்டன், பிப். 25-

ஐஸ்கிரீம்கள் பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தாய்ப் பாலில் இருந்து புது விதமான ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு “பேபி ககா” என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. அவற்றின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லண்டனில் உள்ள கோவன்ட் கார்டன் என்ற ஓட்டலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மாட் ஓ கார்னர் என்பவர் தயாரித்துள்ளார். ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான தாய்ப்பால் 15 பெண்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதற்காக போரம் மம்ஸ் நெட் என்ற இன்டர்நெட் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதை பார்த்ததும் லண்டனை சேர்ந்த விக்டோரியா ஹிலே (35) என்பவர் உள்பட மற்ற பெண்கள் தாய்ப்பால் வினியோகம் செய்தனர். தாய்ப்பால் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள ஐஸ்கரீம் சத்தானதாக இருக்கும். எனவே இதை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்-

அமெரிக்காவில் மேலும் 4 இந்திய மாணவர்களின் கண்காணிப்பு கருவி அகற்றம்


வாஷிங்டன், பிப். 25-

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டிரிவேலி பல்கலைக்கழத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முறையான அங்கீகாரம் பெறாமல் நடத்திய டிரி வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

அதில் படித்த இந்திய மாணவர்கள் 18 பேர் போலி விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்ததாக புகார் கூறப்பட்டது. எனவே அவர்கள் கால்களில் ரேடியோ கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதை தொடர்ந்து விசாரணைக்கு பிறகு 7 மாணவர்களின் கால்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 4 மாணவர்களின் கண்காணிப்பு கருவி நீக்கப்பட்டது.

இதுவரை 11 மாணவர் களிடம் இருந்து கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை சான்பிரான் சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுஷ்மிதா கங்குலி தெரிவித்தார்.

கணிகாணிப்பு கருவி பொருத்தப்பட்ட 18 மாணவர்களில் 15 பேர் இந்திய தூதரகத்தின் மூலம் சட்ட உதவியை நாடினார்கள். 3 பேர் மட்டும் வக்கீல்கள் மூலம் தாங்களாகவே இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இந்திய தூதரகம் தெற்காசிய வக்கீல் சங்கத்தின் மூலம் இப்பிரச்சினையை அணுகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

-மாலை நாளிதழ்-.

ராணாவில் ரஜனிக்கு ஜோடி சினேகா


ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘ராணா’ என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார். ரஜினியின் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக மாதுரி தீட்சித் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க அமெரிக்கா செல்வதனால் அக்கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜனி மகள் சௌந்தர்யாவின் ஆக்கர்ஸ் ஸ்டூடியோ தயாரித்த கோவா படத்தில் நாயகியாக நடித்தவர் சினேகா. எனவேதான் மீண்டும் சினேகாவையே அணுகியுள்ளனராம்.

ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ரத்தினவேலும் பட தொகுப்பை ஆன்டனியும் கவனிக்கின்றனர்.

புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செலவன் படுகொலைக்கு பின்னால்!


"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து வந்த எஸ்.பி தமிழ்ச்செல்வன் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி இருக்கவில்லை. அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே புலிகள் இயக்க தலைவர்களை படையினர் வலை வீசி தேடி வந்தனர், படையினரால் தேடப்பட்டோர் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்."

இவ்வாறு தெரிவித்து உள்ளார் விமானப் படைத் தளபதி மார்ஷல் டபிள்யூ. டி.ஆர். எம்.ஜே.குணதிலக.

இவர் விரைவில் கடமையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

இந்நிலையில் உள்நாட்டு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.

இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு:-

"புலிகளால் அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்பட்டு சில வாரங்களில் படையினரால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். ஆனால் இது பழிவாங்கல் நடவடிக்கையாக இடம்பெற்று இருக்கவில்லை. புலித் தலைவர்களை மிக நீண்ட நாட்களாகவே தேடி வந்தோம். அரச படையினரால் தேடப்பட்டு வந்த புலித் தலைவர்களில் தமிழ்ச்செல்வனும் முக்கியமானவர்.

புலனாய்வுப் பிரிவினர் சரியான முறையில் தகவல்களைப் பெற்றனர். கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் உள்ளார் என நவம்பர் முதலாம் திகதி புலனாய்வுப் பிரிவினருக்கு மிகவும் உறுதியான தகவல் கிடைத்தது.

எனவே தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை விமானங்கள் மூலம் தாக்கினோம். மிகவும் கடினமான இலக்குதான். ஆனால் எமது விமானிகள் சாதித்து விட்டனர். தமிழ்ச்செல்வனின் படுகொலை புலிகள் இயக்கத்தை கதி கலங்க வைத்தது. நாம் எப்படி தமி தமிழ்ச்செல்வனின் மறைவிடத்தை கண்டு பிடித்தோம்? என்பது புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு மூடு மந்திரமாகவே இருந்தது. எனவே நிலத்துக்கு கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களில் பதுங்கி இருந்து கொண்டனர். தலைவர்கள் களத்துக்கு செல்லாமல் இருந்தமையால் புலிகளின் இராணுவ பலம் குன்றியது.

ஈழப் போர்-04 ஐ பொறுத்த வரை புலிகளால் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் மிகப் பேரழிவை படையினருக்கு ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலுக்கு 23 தற்கொலைக் குண்டுதாரிகளை புலிகள் பயன்படுத்தி இருந்தனர்.ஆனால் அங்கு இருந்த எல்லா கட்டமைப்புக்களையும் அவர்களால் அழிக்க முடியவில்லை.

அரசு- தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையிலான 30 வருட கால யுத்தத்தில் படையினருக்கு மிக மோசமான தோல்வி ஆனையிறவு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் வசம் வீழ்ந்ததே ஆகும்.

30 வருட கால யுத்தத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக படையினருக்கு அமைந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கூட்டுத் தலைமை ஆகும். இருவரும் சகோதரர்கள். எனவேதான் அனைத்து விதமான தடைகளையும் உடைத்து புலிகளை வெல்ல முடிந்தது."

பெண்களை ஆபாசப் படமெடுத்த தமிழர் அவுஸ்திரேலியாவில் கைது


பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்துச் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் மறைவான பகுதிகளை தனது துல்லியமான டிஜிடல் கமெராவினால் புகைப்படம் எடுப்பது அவரது நீண்ட கால வழக்கமாக இருந்துள்ளது. அவரது வீட்டில் இருந்த கணனியில் அவ்வாறான ஆயிரம் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக அவுஸ்திரேலியப் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது அவரது கணனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் நன்கு கல்வி கற்ற ஒருவர் என்றும், அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகமொன்றில் அவர் பணியாற்றி வருவதும் பொலிஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் அவர் எதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், அது குறித்து அவர் வாயே திறக்கவில்லையாம்.

Thursday, February 24, 2011

நீர் மூழ்கியில் போதைப்பொருள் கடத்தல்: அம்பலமாகும் வீடியோ .

ஒரு நாட்டு இராணுவம் அல்லது கடற்படையினர் பயன்படுத்துவது நீர் மூழ்கிக் கப்பலாகும். தேசிய பாதுகாப்புக்கு பயன்படுத்தும் இது போன்ற கப்பல்களை போதைப் பொருட்களைக் கடத்தவும் சிலர் பயன்படுத்திவருகின்றனர் என்றால் ஆச்சரியம் அல்லவா ?. கப்பலில் கடத்தினால் மாட்டிக்கொள்வோம் என நீர் மூழ்கிக் கப்பலில் பல காலம் இவ்வாறு கடத்திவந்த பெரும் குழு ஒன்று தற்போது வசமாக மாட்டியுள்ளனர். அவர்களின் நீர் மூழ்க்கிக் கப்பல் தொடக்கம் பல ஆயுதங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

விடியோ




நன்றி http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=935

தமிழக மீனவர் பிரச்சனையில் திமுகவின் அக்கறை ?- மெல்ல வெளிவந்த பூனைக்குட்டி


ஐநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலெல்லாம், அமைதியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியும், கண்டனமும் தெரிவித்து வந்த தமிழக அரசின்

அமைதி கண்டு. அடிமட்டத் தொண்டனுக்கே சிலிர்பை விட சினம்தான் வந்தது. ஆனால் ஆளுந்தரப்பான திமுக; அன்மையில் யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட போது, என்றுமில்லாதவாறு பொங்கி எழுந்ததைப் பார்த்த போது திமுகத் தொண்டனுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் போய்விட்டது. ஆனாலும் அவனும் ஆஹா.. தேர்தல் நேரம். தலைவர் முழிச்சுக்கிட்டார். நாம சும்மா இருக்கலாமா எனத் துள்ளி எழுந்தான் போராட்ட களத்துக்கு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடப் புறப்பட்டார்கள். தலைவரின் மகள் போராட்டத்துக்குத் தலைமைதாங்க, ஆர்பரித்தனர் திமுகவினர். மறிந்தவின் கொடும்பாவியை யார் எரிந்தாலும் வெகுண்டெழுந்து பிடுங்கி எறியும் தமிழகக் காவல்துறை தலைகவிழ்ந்து நிற்க, திமுகவினர் எரித்தனர். ஏனென்றால் அவ்வளவு அராஜகம் நடக்கிறதாம் மஹிந்த ஆட்சியில். அது இப்போதுதான் தெரிந்ததாம் இவர்களுக்கு.

முற்றுகைப் போராட்டம் தொடங்கிய இடத்திலேயே காவல்துறையால் முடித்து வைக்கப்படுகிறது. தயாராக வந்திருந்த காவல்துறை வாகனங்களில், தலைவரின் மகள் உட்பட, அனைவரும் முண்டியடித்து ஏறிக்கொள்கின்றார்கள்.(கைதாகின்றார்களாம்..) அன்றைய காட்சி அத்துடன் முடிந்தது. அடுத்து வரும் இரு நாட்களில், மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தில், இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

வழமையான நாடகத்தில் இறுதிக்காட்சி மட்டும் இன்னமும் நடைபெறவில்லை... அதுதான் விடுதலைக்கு வித்திட்ட தலைவனுக்கு பாராட்டுவிழாவும், வாழ்த்துச் சுவரொட்டியும். தேர்தல் வருதுல்ல..தேவ இருக்கும்னு தொண்டனும் அமைதியாயிட்டான். ஆனால் இப்போ போராட்டத்தின் பின்னணிக் காரணம் முன்னணிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்திச் சேவை. அச் செய்தி உள்ளடக்கத்துடன் கூடிய விமர்சனத்தை, ஊடகவியலாளர் TSS மணி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பிப்ரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றிய செய்தி அது. ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது.

தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.

ஆனால் அதற்குபிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டி வந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. அப்படியானால் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றும் ம்ட்டுமே எண்ண வேண்டியிருந்தது.

இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது, அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது. இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்.. ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பாட்டு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசுவாச எம்.பி உள்ளே நுழைந்திருப்பது என்பது பெரும் அதிர்ச்சிதானே
இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்திவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், இலங்கைத் தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் இலங்கை அமைச்சர் எனபதும் புரிந்துவிட்டது.

ராஜபக்சே என்ற அரச தலைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அமபலப்பட்டு நண்பே ராஜபக்செவிர்க்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழம் தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்காளின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் என்ன பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.

அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு எண்ண வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் அமைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உளவுத்துறைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து, கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவலையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் எனபதை மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல்.

டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்து வருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேலையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது. அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எதிர்ப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது.

தமிழக மீனவர் பிரச்சனையில் திமுகவின் ஆர்வம் என்பதன் பின்னுள்ள பூனைக்குட்டி இப்படியாக வெளியே வர..அசந்து போயிருக்கிறான், போராட்டத்துக்குப் போன திமுகவின் அடிமட்டத் தொண்டன். என்னப்பா.. என்றால், ஏன் தலைவர் எழுதிற படங்கள்ல மட்டும் இப்புடி ஒன்னும் இல்ல..என அங்கலாய்கின்றான் பாவம்...

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டின் செய்தி

DMK behind abduction of TN fishermen: Priest

P K Balachandran

Express News Service

COLOMBO: The recent rounding up of 136 Tamil Nadu fishermen in Sri Lankan waters off Point Pedro and Maadakal had not served as a deterrent to intrusions, according to Rev Fr Ananda Kumar, the parish priest of Maadakal, who is working closely with the fishing community there."On Monday, for example, 50 trawlers were sighted off Maadakal itself," he pointed out. The priest said he did not approve of Jaffna fishermen taking the law into their hands and abducting TN fishermen. "When they came to me saying that they had forced the TNfishers to come ashore, I castigated and asked them to promptly hand the captured men over to the police," he said. Abductions politically instigated Asked if the Lankan navy had instigated or aided the Jaffna fishermen in their adventure, Fr Ananda Kumar said the navy had no part in it, but a powerful Jaffna political leader and the DMK had been behind the moves. He declined to name the Jaffna leader."On the TN side, the incidents helped the DMK beat its political rivals and emerge as the champion of fishermen ahead of the State Assembly elections, and on the Jaffna side, they helped the political leader cosy up to the DMK government.""This leader needs the help of the DMK government to face a long pending criminal case against him in TN." "The fishermen on both sides had become pawns in the hands of politicians," Fr Ananda Kumar said.


நன்றி
courtesy: http://expressbuzz.com
நன்றி
http://ww5.4tamilmedia.com/index.php/special/news-review/3057-2011-02-24-09-25-45

54 கோள்களில் மனித வாசனை

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது. மிகமிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலைவுகள் ‘ஒளி ஆண்டு’ அடிப்படையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது. கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ. வேகத்தில் போனால்கூட கேலக்சியின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

அவ்ளோ பெரிசு. இந்த கேலக்சி ‘ஏரியாவில்’ பூமி, புதன், சனி போல 5 ஆயிரம் கோடி கோள்கள் இருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சுமார் 50 கோடி கோள்களில் அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத, மனிதர்கள் உயிர்வாழ உகந்த சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் (நாசா) அனுப்பிய கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.

‘‘கெப்ளர் விண்கலம் இதுவரை அனுப்பிய லட்சக்கணக்கான புகைப்படங்களை ஆராய்ந்ததில் 1235 கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கின்றன. 54 கோள்களில் ஏற்கனவே மனிதர்கள், உயிர்கள் இருந்திருக்கக் கூடும். கோள்களில் மனித உயிர்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. அண்ட வெளியில் உள்ள கோள்கள் குறித்து காஸ்மிக் கணக்கெடுப்பு நடத்துவதே ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்று கெப்ளர் விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் வில்லியம் பெரூக்கி கூறியுள்ளார். மேலும் பல புதிய கிரகங்கள், மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தொடர் ஆய்வில் தெரியவரும்.

சச்சினிடம் மன்னிப்புக் கேட்டேன் : சேவாக் தெரிவிப்பு


200 ஓட்டங்கள் சாதனையை நினைக்கவில்லையென்றும் ரன் அவுட்டுக்காக டெண்டுல்கரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் செவாக் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மிர்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 87 ஓட்டங்களில் பங்களாதேஷை வீழ்த்தியது. செவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 140 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 175 ஓட்டம் எடுத்தார்.

ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்ற செவாக் பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்கள் குவித்தது சாதனையாக உள்ளது. நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையைப் பற்றி நினைக்கவில்லை. எனது துடுப்பாட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றவகையில் இருந்தது.

இந்திய அணி விளையாடிய பின் ஓய்வறையில் நான் டெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

ஓடுவதற்காக டெண்டுல்கர் என்னை அழைத்த போது நான் அவரைக் கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.

ஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். விராட் கோஹ்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். பங்களாதேஷ் அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகின்றதென்றார்.

இந்தியா எங்களை எளிதாக எடைபோட முடியாது : இங்கிலாந்து அணித் தலைவர்


உலக கிண்ண போட்டிகளில் வரும் ஞாயிறன்று இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நெதர்லாந்து அணிக்கு எதிராக தங்கள் அணி விளையாடியதைக் கண்டு....இந்தியா அணி தங்களை எளிதாக எடைபோட்டு ஏமாறுவார்கள் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

"நேற்றைய எங்களது ஆட்டத்திற்குப் பிறகு இந்தியா எங்களை லேசாக எடைபோடும் என்று நம்புகிறேன்.

ஆனால் சிறந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் எங்கள் ஆட்டத்திறனை உயர்த்துவோம். இந்தியாவுடன் பெங்களூரில் விளையாடுவது குறித்து நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம். அங்கு சூழ்நிலை அபாரமாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்தியாவை வீழ்த்துவோம்." என்றார் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்.

நெதர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ரயான் டென் டஸ்காதிக்கு மிகப்பெரிய புகழாரம் சூட்டினார் ஸ்ட்ராஸ்.

"அவர் நேற்று விளையாடிய ஆட்டத்திற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எஸ்ஸ்கெஸ் அணிக்கு அவர் இதனைச் செய்தபோது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உயர்மட்ட கிரிக்கெட்டில் இவ்வாறு ஆடுவது கடினம், ஆனால் அதனை அவர் மிகத் திறம்படவே செய்தார்." என்றார் ஸ்ட்ராஸ்.

நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் பவர் பிளேயை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிய ஸ்ட்ராஸ், பேட்டிங்கில் தொய்வில்லாமல் இருந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

மன்னிப்பதில் பெண்களே முதலிடம்


மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.

மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார்.

மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது

எண்பத்தி்யேழு வயதுப் பாட்டி மீது பாலியல் பலாத்கார முயற்சி: இருவரும் உயிரிழந்தனர்

குருநாகல் பகுதியில் எண்பத்தியேழு வயதான பாட்டியொருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார முயற்சி காரணமாக பாட்டியும், அதனுடன் தொடர்புடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.

பாலியல் பலாத்கார முயற்சியின் போது பிரஸ்தாப இளைஞனால் பாட்டியின் தலை நிலத்தில் மோதப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக பாட்டி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இளைஞன் தப்பிச் சென்றிருந்தார்.

பாட்டியின் பக்கத்து வீட்டு வாலிபனே யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து பலாத்கார முயற்சியை மேற்கொண்டிருந்தார். இளைஞனுக்கு இருபத்தியெட்டு வயது என்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

அவ்வாறான நிலையில் பிரதேசத்தின் காட்டுப் பகுதியொன்றில் பிரஸ்தாப இளைஞனின் சடலம் மரமொன்றில் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விபரீதமான முயற்சி காரணமாக இருவரின் உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ள இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவம் குருநாகல் மாவட்டத்தின் அளவ்வை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழக மீனவர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் விளையாட்டு நடத்தும் தி.மு.க. - பலவந்தமாக இலங்கைக் கடலுக்கு அனுப்பப்பட்ட றோலர்களின் உரிமையாளர் பாலு


பருத்தித்துறை மற்றும் மாதகல் பகுதியில் அண்மையில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தின் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியுமான தி.மு.க. பின்னணியில் இருப்பதாக மாதகலைச் சேர்ந்த பங்குத் தந்தை ஒருவர் கூறியுள்ளார்.

மீனவ சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வரும் வண.பிதா ஆனந்தகுமாரே இந்த விடயம் குறித்து எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

உதாரணமாக கடந்த திங்கட்கிழமை 50 றோலர்கள் மாதகல் கடல் பகுதியில் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ள அந்த மத குரு தமிழக மீனவர்களை கடத்தி வந்த விடயத்தில் யாழ்ப்பாண மீனவர்கள் சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பலவந்தமாகவே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக அந்த மீனவர்கள் தனக்குத் தெரிவித்ததாக வண.பிதா தெரிவித்திருக்கிறார்.

இந்த மீனவர்கள் விடயத்தில் அரசியல் ரீதியான தூண்டுதல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த விடயத்தில் இலங்கைக் கடற்படை தூண்டியதா அல்லது உதவி வழங்கியதா என்பது பற்றி கேட்டபோது, இலங்கைக் கடற்படை இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லையெனவும் தி.மு.க. இதன் பின்னணியில் இருந்ததாகவும் அத்துடன், யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் மதகுரு ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரமானது இந்தியாவில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவே பொறுப்பேற்க வேண்டுமென பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ட்றோலர்களின் உரிமையாளர்களால் அழிவையேற்படுத்தும் றோலர்களை இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவி ஈடுபடுத்துமாறு தாங்கள் பலவந்தப்படுத்தப்பட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

இந்த ட்றோலர் படகுகள் யாவும் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

நாங்கள் பிடிக்கும் மீன் அளவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதிகளவு மீன்களைப் பிடிக்கவில்லையாயினும் றோலர்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஊதியங்களை வழங்குவதாகவும் பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அநேகமான மீன்பிடி றோலர்கள் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக வண.பிதா ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் மீன்கள் குறைவாக இருப்பதால் தாங்கள் இலங்கைப் பகுதிக்கு வந்ததாகவும் அவ்வாறு செய்யுமாறு றோலர்களின் உரிமையாளர்கள் தங்களை வலியுறுத்தியதாகவும் அந்த மீனவர்களை மேற்கோள் காட்டி வண.பிதா ஆனந்தகுமார் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்த மீனவர்களால் பாலு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு சுமத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லையென அவர் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்டுவதற்கு யார் என்ற நிலையிலேயே தமிழக மீனவர்கள் இருப்பதாகவும் வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

தெண்டுல்கர் வீடு கட்ட அனுமதி மறுப்பதா?


தெண்டுல்கர் மும்பையில் புதிதாக 4 மாடி கொண்ட வீடு கட்டி வருகிறார். இதற்காக நகர வடிவமைப்பு துறையிடம் அனுமதி பெற்று இருந்தார்.

இப்போது அதன் ஒரு தளத்தில் உடற் பயிற்சிக்கூடம் அமைக்க வசதியாக கட்டிடத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் நகர வடிவமைப்பு துறையிடம் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு மராட்டிய நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது தெண்டுல்கர் வீடு கட்டுவதில் சின்னமாற்றம் செய்ய சட்ட ரீதியாக அனுமதி கேட்டு இருக்கிறார்.

ஆனால் அதற்கு மராட்டிய அரசு அனுமதி அளிக்காதது வெட்ககரமானது. உலக அளவில் தெரிந்த ஒரு வீரரை இப்படி அவமதித்து இருக்கின்றனர். வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் மும்பையில் குடியேறி சட்ட விரோதமாக குடிசை போட்டு தங்கி உள்ளனர்.

இதை அரசு சட்ட ரீதியாக்கி வருகிறது. அப்படி இருக்க சட்ட ரீதியாக முறைப்படி விண்ணப்பித்த தெண்டுல்கருக்கு மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன்? மும்பையில் எத்தனையோ கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டி உள்ளனர். அதை முதல்-மந்திரி கவனத்துக்கு கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். அவற்றை எல்லாம் முதல்-மந்திரி இடிக்க உத்தர விடுவாரா என்று அவர் கூறினார்.

Wednesday, February 23, 2011

குடிகரர்களுக்கு ஒரு நல்ல செய்தி மிதமாக தன்னி அடித்தால் இதய நோய்கள் வராது


கனடா ஆராய்ச்சிக்குழு ஒன்று முப்பது ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் மிதமாக ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு இதய நோய் சாத்தியக் கூறுகள் குறைவு என கண்டறிந்துள்ளனர்.

ஆல்கஹால் அருந்துவது உடலுக்கு உகந்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின் இந்த முடிவு வெளியாகி உள்ளது. பிரிட்டனில் ஒரு யூனிட் ஆல்கஹாலில் 8 கிராம் சுத்த ஆல்கஹால் உள்ளது.

தொடர்ந்து மிதமாக ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு எல்லா வகை இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் 25 சதவீதம் குறைவாக உள்ளது. மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு ஆகிய பிரச்சனைகள் மிதமாகக் குடிப்பதால் குறைகின்றது.

இது குறித்து பேராசிரியர் வில்லியம் கலி கூறியதாவது: எங்களது ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் முடிவாக ஒன்று அல்லது இரண்டு முறை ஆல்கஹால் அருந்துவது நன்மை தரக்கூடியதே என்று கூறினார்.

இந்த ஆய்வு முடிவுகள் நாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உண்மையாக்குகின்றது என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் முதன்மை நர்ஸ் கேத்தி ரோஸ் கூறியுள்ளார்.

பட்டம் வாங்கிய பிறகு தான் நடிப்பு: அமலா பால்


'வீரசேகரன்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவர் அமலா பால்.

'சிந்து சமவெளி'யால் சர்ச்சையின் நாயகியாக உருவெடுத்து, 'மைனா' மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர். அதிலும் 'சிந்து சமவெளி' படத்தில் மாமனாருடன் சல்லாபிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் மாதர் சங்கங்கள் கொடுத்த பப்ளிசிட்டியால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இனி சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அவர், புதிய படங்களில் கதையை நன்கு கேட்ட பிறகே தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பல முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் அமலாவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் நடிக்க வந்து விட்ட அமலாவுக்கு, கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது ஆசையாம். அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் அந்த ஆசை நிறைவேறாமல் இருந்து வந்தது.

இப்போது மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர அமலா பால் திட்டமிட்டிருக்கிறாராம். இதனால் விரைவில் முறையான அறிவிப்புகளுடன் சினிமாவுக்கு இருந்து தற்காலிக முழுக்கு போடப்போகிறாராம். பட்டம் வாங்கிய பிறகே நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாக அமலா பால் கூறியிருக்கிறார்.

கவர்ச்சி உடையில் அசின்




டிகை அசின் பல படங்களில் கவர்ச்சிக்கு மறுப்பு சொல்லி வந்தார்.

தமிழில் குடும்ப பாங்கான கேரக்டர்களிலும், மாடர்ன் டிரெஸ்களிலும் மட்டுமே நடித்தார். இந்தியிலும் அதே கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தார்.

'கஜினி', 'லண்டன் டிரீம்ஸ்' படங்களில் கவர்ச்சி காட்டவில்லை. நிறைய படங்களில் கவர்ச்சியாக நடிக்க கேட்டு வந்தனர்.

அவைகளை மறுத்து விட்டார். இப்படிப்பட்ட அசின் தற்போது திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார். அவர் நடிக்க உள்ள 'ஹவுஸ்புல்' இந்தி படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்துள்ளார்.

சக நடிகைகள் ஆடை குறைப்பு செய்து ஆபாசமாக நடிப்பதால் போட்டிகளை சமாளிக்க கவர்ச்சிக்கு குதித்துள்ளார்.

அசின் நீச்சல் உடையில் நடிப்பதை ஒப்புக்கொண்டதும் படத்தின் தயாரிப்பாளர் சஜீத் நடியட் வாலாவும் உறுதிபடுத்தினார்.

அவர் கூறும்போது படபிடிப்பு இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளில் நடக்கிறது. கதைக்கு தேவை என்பதால் நீச்சல் உடையில் நடிக்க அசின் சம்மதித்தார் என்றார்.

நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்


தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பவர் வின்சென்ட் பார்னஸ். இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

அந்த நாய்க்கு சச்சின் என்று பெயர் சூட்டி உள்ளார். சச்சின் தெண்டுல்கர் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். எனவே அவரது பெயரை எனது செல்ல நாய்க்கு சூட்டியுள்ளேன் என்று அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் நாயை மரியாதைக்குரிய விலங்காக கருதுகின்றனர். எனவே ஒருவரை கவுரவிக்க விரும்பினால் அந்த பெயரை நாய்க்கு சூட்டுகின்றனர். அதே போல இவரும் தனது நாய்க்கு சச்சின் பெயரை சூட்டி உள்ளார்.

ஆனால் இந்தியாவில் நாயை மரியாதைக்குரிய விலங்காக கருதுவது இல்லை. எனவே அவர் சச்சின் பெயரை வைத்ததற்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பயிற்சியாளர் நாய்க்கு சச்சின் பெயரை வைத்திருப்பது பற்றிய தகவல் மும்பையில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையின் இணையதளத்தில் வந்திருந்தது.

அதில் ரசிகர்கள் எழுதியுள்ள கருத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்ததுடன், அந்த பெயரை வாபஸ் பெற வேண்டும் என்றும் பலர் குறிப்பிட்டு இருந்தனர்.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் எல்லாளன்!



உலக வரலாற்றில் தனிச் சிறப்பு வாய்ந்த இத் திரைப்படம் முழுமையாக‌ எமது தளத்தில் பிரசுரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. எல்லாள‌ன் முழுமயான‌ காணொளி




இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது.

இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. விழாவில் திரையிடப்படுகின்றமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் 17 திரைப் படங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. 1. எந்திரன்

2. அங்காடித் தெரு

3. களவாணி

4. மதராசபட்டினம்

5. ஆடுகளம்

6. மைனா

7. பாஸ் என்கிற பாஸ்கரன்

8. விண்ணைத்தாண்டி வருவாயா

9. யுத்தம் செய்

10. தா

11. பயணம்

12. தென்மேற்கு பருவக்காற்று

13. என் சுவாசம்

14. எங்க வீட்டுப் பிள்ளை

15. கப்பல் ஓட்டிய தமிழன்

16. செங்கடல்

17. எல்லாளன்

இவற்றில் எல்லாளன், செங்கடல் ஆகிய திரைப் படங்கள் சிறப்புப் பிரிவில் காண்பிக்கப்படுகின்றன.

எல்லாளன் படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்

இவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் விமானப் படைத் தாக்குதல் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டு உள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நிஜ ஆயுதங்கள் திரைப் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. தாக்குதலுக்கு முன்னர் இயக்க உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட நிஜப் பயிற்சிகளும் படக் காட்சிகளில் இடம்பெறுகின்றன.

திரைப்படத்துக்கான ஒளிப் பதிவை இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த கலைஞர் சந்தோஷ் மேற்கொண்டு இருக்கின்றார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க மறுப்பு



சூப்பர் ஸ்டாரின் "சிவாஜி", "எந்திரன்" படங்களுக்கு பின் அவருடன் நடிக்க அனைத்து ஹீரோயின்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஹிந்தியின் பழைய பிரபலமான நடிகையான மாதுரி தீக்ஷித் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை

மறுத்துள்ளார். ரஜினிகாந்த் அடுத்து துவங்கவிருக்கும் படம் "ரானா". இதில் அவர் 3 வேடங்களில் நடிக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இளைய ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் தீபிகா படுகோனே.

மூத்த வயதுடைய ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க மாதுரி தீக்ஷித்திடம் அணுகிய போது, அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இதற்கு மாதுரி தீக்ஷித் கூறியதாவது-"நான் சமீபகாலமாக, இந்தியாவிலேயே அதிக நேரம் கழித்து கொண்டிருப்பதால், எனது குழந்தைகளை பிரிந்திருப்பதை கடினமாக உணருகிறேன். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல விரும்புகிறேன். இப்போது ஒப்புக்கொள்ளவிட்டாலும் 1987-லேயே ரஜினிகாந்த்தும், மாதுரி தீக்ஷித்தும், "உத்தர் தக்ஷின்" என்ற படத்தில் நடித்து இருகின்றனர் , அதனால் ரானா படத்தில் அந்த கதாபத்திரத்தில் நடிக்க, சிநேகா மற்றும் அனுஷ்காவை அணுகிக் கொண்டிருகின்றனர்.

பெர்லுஸ்கோனி புகழ் ரூபி: கால்பந்து வீரருடன் தொடர்பு


இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நடன அழகி ரூபி பற்றி மேலும் பல பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அவர் தொடர்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த நைட் கிளப் நடன அழகி கரீமா மரூக் எனப்படும் ரூபி ரூபகோரி. மிலன் நகரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் 3 ஆயிரம் யூரோ நாணயங்களுடன் பிடிபட்டார். திருட்டு பணமா, விபசார பணமா என்பது தெரியாததால் அவரை ஸ்டேஷனுக்கு பொலிசார் கொண்டு சென்றனர்.

அப்போது பாரீஸ் போயிருந்த இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியிடம் இருந்து 2 மணி நேரத்தில் போன் வந்தது. நீங்கள் கைது செய்திருக்கும் பெண் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு வேண்டியவள். இரு நாட்டு உறவில் பிரச்னை ஏற்படுத்தி விடாதீர்கள். உடனே ரிலீஸ் செய்யுங்கள் என்றார்.

தனக்கு மிகவும் வேண்டிய மினெட்டி என்பவரது ஆதரவில் ரூபி தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். மினெட்டி என்ற பெண் ஏற்கனவே பெர்லுஸ்கோனியுடன் தொடர்பு உடையவர். பெர்லுஸ்கோனியின் டிவி சேனல்களில் நடனம் ஆடியவர். பின்னர் கடந்த அக்டோபரில் மினெட்டி மூலமாக ரூபியை பெர்லுஸ்கோனி சந்தித்ததாக தகவல் வெளியானது.

மிலன் லாட்ஜில் நடந்த பார்ட்டியில் பெர்லுஸ்கோனியுடன் கலந்து கொண்டேன். அவருக்கு அருகே அமர்ந்திருந்தேன். பின்னர் மாடிக்கு அழைத்துச் சென்றார். ரூ.4 லட்சமும், நகைகளும் கொடுத்தார். மற்ற படி தவறான உறவில் நாங்கள் ஈடுபடவில்லை என்றார் ரூபி.

ரூபி போல 17 வயது மற்றும் அதைவிட குறைந்த வயது பெண்கள் பலருடன் பெர்லுஸ் பாலியல் உறவு வைத்திருந்ததாக சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மைனர் பெண்களுடன் உறவு கொண்டது மற்றும் அவர்களுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது ஆகியவை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பெர்லுஸ்கோனிக்கு அதிகபட்சம் 15 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடனும் ரூபி பாலியல் உறவு வைத்திருந்தது அம்பலமாகியிருக்கிறது.

மிலன் ஓட்டல் அறையில் நானும், ரொனால்டோவும் கடந்த ஆண்டு ஜனவரியில் தங்கினோம். ரூ 2.5 லட்சம் கொடுத்தார். நான் எழுந்திருப்பதற்குள் போய்விட்டார் என்று ரூபி கூறியுள்ளார். ரூபியை பார்த்ததே இல்லை என திட்டவட்டமாக ரொனால்டோ மறுத்துள்ளார்.

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கண்டுபிடிப்பு


பயங்கரமான தசைகள் கொண்ட புதிய டைனோசர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இடி ஓசை தொடைகள்" என அழைக்கப்படும் புதிய டைனோசர் யு.எஸ்.ஏ வில் உள்ள யுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு அறிக்கை ஆக்டா பாலேன்டோ லோஜிகா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வு அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

நீண்ட கழுத்து உடைய பல்லியின டைனோசர் வகையை சேர்ந்ததாக இந்த டைனோசர் உள்ளது. இது 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது ஆகும். பெரிய மற்றும் சிறிய டைனோசர்களின் எலும்பு படிவங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெரிய டைனோசர் எடை ஏறக்குறைய 6 டன் எடை கொண்டதாகவும், 14 மீற்றர் நீளம் கொண்டதாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த டைனோசர் ஒரு பெரும் யானையை ஒத்ததாக உள்ளது.

பெரிய டைனோசரின் உருவத்தில் 3 ல் ஒரு பங்கு கொண்டதாக குட்டி டைனோசர் உள்ளது. இதன் எடை 200 கிலோவும், 4.5 மீற்றர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது. பல்லியின டைனோசர் குடும்பத்தில் மிகப் பெரிய தொடை கொண்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பார்த்து எழுதி பட்டம் வாங்கிய ஜேர்மன் அமைச்சருக்கு நெருக்கடி


திருட்டுத்தனமாகவும், மற்றொருவரின் கருத்துகளையும், எழுத்தையும் பார்த்து எழுதி பி.எச்.டி பட்டம் பெற்றதாக ஜேர்மன் ராணுவ அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது.

இதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரியுள்ளதுடன் தான் வாங்கிய பி.எச்.டி பட்டத்தினையும் திருப்பி தந்துள்ளார். ஜேர்மனியில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியில் சான்சலராக ஏஞ்சலா மெர்‌கெல் உள்ளார்.

இவரின் நம்பிக்கை பெற்றவரும், ராணுவ அமைச்சராக இருப்பவருமான தியோடர் ஜூ கூட்டன்பெர்க் என்பவர் கெல்ஹியம் மாகாண பல்‌கலைகழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றிருந்தார். ஆனால் இவர் முறையாக ஆராய்ச்சி ‌செய்யாமல் வேறு ஒருவரின் எழுத்துக்களை மற்றும் ஆராய்ச்சிகளை திருடியும், அப்படியே பார்த்து எழுதியும் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்து பி.எச்.டி பட்டம் பெற்றதாக அந்நாட்டு உள்ளூர் பத்திரிகை ஒன்று தகுந்த ஆதாரங்களுடன் மற்றும் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டு இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இவரின் ‌தில்லு முல்லு அம்பலமானதால் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஹம்பர்க் தேர்தல் பிரசார பேரணி நடந்த போது தான் வாங்கிய பி.எச்.டி பட்டத்தை திருப்பி தருவதாகவும், தவறு செய்துவிட்டதாகவும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் இதற்கு எந்த உள்நோக்கம் இல்லை என்றும் கூறினார்.

இது குறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் கூறுகையில் அவரது பி.எச்.டி பட்டத்தினை வைத்து அமைச்சராக்கவில்லை என்பதாலும், தவறை ஓப்புக்கொண்டதால் அவர் பதவி விலக தேவையில்லை என்றார்.

பூமியில் நடக்கப் போகும் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிய முடியும்: ஆராய்ச்சித் தகவல்

வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும் போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது தொழில்நுட்பத்தின் சாதனை.

கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன் கூட்டியே உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இதில் அடுத்தகட்ட முயற்சி வரப்போகும் நிலநடுக்கத்தை முன்கூட்டி தெரிந்துகொள்வது.

இங்கிலாந்து மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், லண்டன் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலன் ஸ்மித், விட்டாலி சிம்யேரெவ் ஆகியோர் தலைமையில் இணைந்து மாஸ்கோவில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து செயல்பாடுகளையும் துவக்கியுள்ளனர்.

"ட்வின் சாட்" என்பது இந்த ஆய்வில் ஈடுபடப் போகிற செயற்கைக்கோள்கள். ஒன்று தொலைக்காட்சி பெட்டி அளவில் இருக்கும். இன்னொன்று அதையும் விட சிறியது. விண்ணில் செலுத்தப்படும் இந்த இரண்டும் சில நூறு கி.மீ. தொலைவில் பூமியை வட்டமடித்துக் கொண்டே இருக்கும்.

எரிமலையின் செயல்பாடுகள் மற்றும் பூமியில் கணிசமான விபரீத மாற்றங்கள் தெரிந்தால் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு செயற்கைகோளில் இருந்து தகவல் வரும். நில நடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதை 2015 ல் விண்ணில் செலுத்த உள்ளனர்.