Wednesday, December 28, 2011

புலிகள் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு!

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரின் மீண்டும் தமிழில் !! (மசாலா இணைப்பு)

காதல், கத்திரிக்காய் என காணாமல் போன "துள்ளுவதோ இளமை" புகழ் ஷெரீன் "அபாயம்" படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு முன் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் "டேன்ஜர்" எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் அபாயமாக தமிழில் டப்பாகி வெளியாக உள்ளது. இது சம்பந்தமான பிரஸ்மீட்டில் ஷெரின் உங்களது காதல் என்னாயிற்று? காதலர் என்ன ஆனார்? எனக்கேட்ட போது, எனக்கு எக்கச்சக்கமான பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள் ? என வினவினார். என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம் என்று எஸ்கேப் ஆனார். மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி வெண்ணிலா தான் என்றவர், அதுவும் பெண் நாய் குட்டி என்றதுடன் அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும் மற்றபடி இன, மொழி, மதபாகுபாடெல்லாம் கணவர் விஷயத்தில் நான் பார்க்கப்போவதில்லை என்றார். தெளிவான பெண்!

எப்போதெல்லாம் அழைக்கிறேனோ அப்போதெல்லாம் நீ வேண்டும் - பலாத்கார படத்தின் விளைவு

பெண்கள் இப்படி கூடவா செய்வார்கள் என்று அதிர வைக்கின்றன சில சம்பவங்கள். தற்போது நடந்திருப்பது நாகர்கோவில் பகுதியில். நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண் திருமணம் ஆனவர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடந்திருக்கிறது இந்த கள்ளக்காதல். ஜாலியாக ஊர் சுற்றி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக க.கா. டெவலப் ஆகிவந்த நேரத்தில் வாலிபருக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணா.. இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்ற வசனம் ஞாபகத்துக்கு வந்ததா தெரியவில்லை.. வாலிபர் திடீரென திருந்தி விட்டாராம். கள்ளக் காதலியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். அவளை சந்திப்பதை குறைத்தார். கணவன் இருந்தும் இத்தனை நாள் நான் காதலிக்கவில்லையா.. உனக்கு திருமணம் என்றதும் விட்டுவிட்டு ஓடப் பார்க்கிறாயா? என்றாள் காதலி. இருவரின் வருங்காலம், குழந்தை, குட்டிகள் என்று அவன் சொன்ன அட்வைஸ்கள் அவள் காதில் ஏறவில்லை. எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, நீ வர வேண்டும். ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன். என்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ததாக போலீசில் சொல்லி கம்பி எண்ண வைத்துவிடுவேன்� என்றாள். காதல் பார்வை மட்டுமே தெரிந்த கள்ளக் காதலி கண்ணில் கனல் தெறித்ததும் மிரண்டு போனார் வாலிபர். காதலிகிட்டேயிருந்து காப்பாத்துங்கய்யா என்று போலீசில் புகார் கொடுத்தார். ஒரு பெண்ணா இப்படி மிரட்டியிருக்கிறாள் என்று போலீசுக்கே அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரித்தனர். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன். அவன்தான் என் உலகம். அவன் சந்தோஷத்துக்காகத்தான் வாழ்ந்து வருகிறேன். அவனை பிரிந்து என்னால் வாழ முடியாது என்பதால்தான் மிரட்டினேன் என்று அழுதாள் அந்த பெண். உனக்கும் கணவர் இருக்கிறார், குடும்பம் இருக்கிறது. அந்த நபரை நம்பி ஒரு பெண் வரப்போகிறாள். இனி, இருவரும் சந்திக்க கூடாது. போனில்கூட பேசக்கூடாது. எதிர்காலத்தை உணர்ந்து, குடும்ப நலனை அறிந்து செயல்படுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீசார். ஆசை அத்துமீறும் வயதில் சில தடுமாற்றங்கள் இருக்கும். அந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்ல ஆள் இருந்தால் யாரும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள்.

லெஸ்பியனாக மாறிய நந்திததாஸ்.! (பரபரப்பு வீடியோ)

லெஸ்பியனாக நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு என்றார் நந்திததாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நந்திதாதாஸ். இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: பெண்களுக்கிடையேயான நெருக்கமான உறவை மையப்படுத்தி உருவான படம் பயர். என்னுடைய முதல் படமான இதில் நான் லெஸ்பியனாக நடித்தது துணிச்சலான முடிவு. இதில் நடித்தது பற்றி சர்ச்சை எழுந்தது. அதுபற்றி கவலைப்படவில்லை. பாலிவுட்டை பொறுத்தவரை வர்த்தக ரீதியிலான படங்கள்தான் வருகின்றன. மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து துணிச்சலான கதை அம்சங்களுடன் ஒரு சில படங்கள்தான் வருகிறது. அதனடிப்படையில் உருவான படம்தான் பயர். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. மக்களிடையே உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்லும் சில கதைகளை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். அதுபோல் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா என்பது வாழ்க்கையை பிரதிபலிப்பது. மக்கள் பிரச்னைகளை மையமாக கொண்ட படங்களில் நான் நடித்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது. இப்போதும் அதுபோன்ற கதைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.

படம் பார்க்கும் முன்னர் நண்பன் பற்றிய சுவாரசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் : * ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ். * படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட். * படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல். * படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம். * HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள். * " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய சுளீர் வசனங்கள் இருக்கிறது நண்பன் படத்தில். ஆக மொத்தத்தில் விஜயின் மற்றைய படங்கள் போலில்லாமல் நம்பி உள்ள போகலாம் !

Sunday, December 25, 2011

கொழும்பில் திகிலூட்டுகிறார் 'செக்யூரிட்டி ஜோசப்'! (காணொளி இணைப்பு)

'செக்யூரிட்டி ஜோசப்' ஒரு குறுந் திரைப்படம். எட்டே நிமிடங்களில், ஆறு கதாபாத்திரங்களை மட்டுமே சித்திரித்து உருவாக்கப்பட்ட ஒரு திகிலூட்டும் குறுந்திரைப்படம் இது. இறந்த ஒருவரின் ஆவியை முக்கிய கதாபாத்திரமாக உருவகித்து, இப்படம் உருவாக்கப்பட்டடுள்ளது. இத்திரைப்படத்தை பார்க்கும் போதே, அடுத்து என்ன நடக்க போகின்றதோ என்ற ஆவல் - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இது படமாக்கப்பட்டுள்ளது. நம்நாட்டுக் கலைஞர்கள் என்பதைவிட நம் நாட்டு இளைஞர்களால் இவ்வாறு ஒரு குறுந்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இலங்கைத் தமிழ் சினிமாத்துறையானது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்னடைவைத்தான் கொண்டிருக்கின்றது என்பது பலரதும் கருத்தாக இருக்கின்றது. ஆனால் அதுவல்ல உண்மை. தற்போது இலங்கையில் சிறந்த கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்களால் பல படங்கள், பாடல்கள் உருவாக்கப்படும் போதெல்லாம் அது சமூகத்தில் இலைமறை காயாகவே இருந்து வந்துள்ளன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. தமது படைப்புக்களைச் சமூகத்தின் முன் கொண்டு வரவேண்டியது எமது கலைஞர்களின் கடமையாக இருக்கின்றது. அதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுவதோ தமக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதோ எந்த வகையிலும் உவப்புடையதல்ல. இதனைத் தவிர்த்து ஏனையோரும் எமது படைப்புக்கள் மீது அதிக ஆர்வம் கொள்ளும் வகையில் ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டிய தவசியம். இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல், எமது நாட்டுக் கலைஞர்களின் படைப்புக்களை விடுத்து, அயல்நாட்டுக் கலைமீது நாட்டம் கொள்வதே நம்மவரின் வாடிக்கையாகிவிட்டது. எது எவ்வாறாயினும் நம் நாட்டுக் களைஞர்களை ஊக்குவிக்க ஊடகங்களின் பங்களிப்பும் அத்தியாவசியமாகிறது. குறிப்பாக நம் நாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள், எமது கலைஞர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் கலைப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், நம் நாட்டில் இலைமறைகாயாகப் பரவிக் கிடக்கும் ஈழத்துக்கலை ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும். எமது ஈழக் கலைஞர்கள் சிலரின் அண்மைய கலை வெளிப்பாடுதான் 'செக்யூரிட்டி ஜோசப்' எனும் குறுந்திரைப்படம். ஒரே இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்திரைப்படக் கலைஞர்களின் முயற்சி திருவினையாகவே வேண்டும். இவர்களின் முயற்சியும் நம் நாட்டுத் திரைப்படத்துறை மீதான ஆர்வமும் உண்மையில் பாராட்டுக்குரியதே. இவர்களின் இந்த அரிய முயற்சி, எதிர்காலத்தில் மேலும் பல திரைப்படக் கலைஞர்கள் நம் நாட்டில் உருவாவதற்கு நிச்சயம் வழிகோலும் என்பது திண்ணம். இறந்த ஒருவரின் ஆவியை முக்கிய கதாபாத்திரமாக உருவகித்து, panasonic p2 Full HD camera உதவியுடன், நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட அற்புதப் படைப்பே 'செக்யூரிட்டி ஜோசப்'. படத்தின் படைப்பாளிகளான சி. ஜெகன், ஷியாம், ஆர்.விஜிதகுமார், மெல்வின் மிரான்டா, லக்ஷ்மன், எஸ். சத்தியேந்திரன் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகவதோடு இது போன்று சமூக சிந்தனை கூறும் பல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். Interview with 'Security Joseph' short film team

டேம் 999 திரைப்பட பாடல்களுக்கு ஓஸ்கர் விருது கிடைக்க ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை

மலையாள இயக்குனர் சோஹன் ராய் இயக்கியுள்ள டேம் 999 திரைப்படத்தின் பாடல்களுக்கு ஒஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் தமிழகம் மற்றும் கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல் டேம்999 என்ற திரைப்படத்தை கேரளாவை சேர்ந்த இயக்குனர் சோகன் ராய் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்துக்கு ஒசிபச்சன் இசையமைத்து உள்ளார். சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் 2011 ஓஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஓஸ்கர் விருதுகள் கிடைத்தன. தற்போது ரஹ்மான், ஏக் திவானா தா என்ற பாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்காக ஆக்ரா வந்துள்ள ரஹ்மான், அங்கு அளித்த பேட்டியில், ஓஸ்கர் விருதுக்கான திரைப்படங்களின் போட்டியில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஒஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உச்சிதனை முகர்ந்தால் படம் தொடர்பாக சன் TV சிறப்பு நிகழ்ச்சி !

தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழிழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது. உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கோடூர கொலைகள்,பாடசாலைகள் மீதான விமானத்தாக்குதல்கள்,தமிழ் இளைஞர்களின் கண்களை கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்ச்சிகளும் உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்து கவிஞர் காசியானந்தன் அவர்களால் எழுதப்பட்ட இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ?என்ற பாடலும் ஒளிபரப்பப்பட்டதோடு உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தின் இயக்குணர்,நடிகர்கள்,ஒளிப்பதிவாளர் என்று அந்த படத்தில் பணியாற்றியவர்களின் பேட்டிகளும் ஒளிபரப்பப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் செஞ்சோலை வலாகத்தின் மீது சிங்கள கழுகுகள் குண்டு வீசி அப்பாவி மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட போதும் அது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வந்திருந்த சன் டிவி தற்போது ஈழத்தின் முழு வேதனையையும் தமிழீழ தனி நாடு கேட்பதற்கான தேவையையும் உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பாக நல்லவிதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சன் டிவிக்கு உயர்வு ஈழத்து மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். "இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ"

விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட தாலிக்கொடிக் கேள்வி !

"பிள்ளைகளே இன்று நான் உங்களுக்குப் புதிதாக ஒரு கதை சொல்லப் போகின்றேன்" என்று ஆரம்பித்தார் உபாத்தியாயர். அது என்ன விக்கிரமாதித்தன் கதைதானே என மாணவர்கள் வினவினார்கள். ஆமாம் ! ஆமாம் ! என்ற உபாத்தியாயர் கதையை ஆரம்பித்தார் ! அப்போ, முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தின்மேல் இருந்த வேதாளத்தை படுகஷ்டப்பட்டு பிடித்துக்கொண்டு அதனை தோளில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனது பராக்கிரமத்தையும், விடா முயற்சியையும் வியந்த வேதாளம் மீண்டும் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தது. சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த அமர்வு ஒன்றில் 2 பெண்கள் தாலிக்கொடி பறிக்கப்பட்டதே அதுபற்றி உனக்குத் தெரியுமா என அதுகேட்டது. விக்கிரமாதித்தனும் ஆம் ஆம் அதனை வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தேன் என்றான். மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்ட அன்றைய காலத்தில், அந்த அமர்வுக்கு அதன் பிரதமரே தலைமை வகித்தார் அல்லவா. வழக்கம் போலவே, வெட்டிப் பேச்சாகப் பல விவாதங்கள் நடைபெற்றாலும் இறுதியில் பணம் சேகரிக்கும் விடயத்தில் பேச்சுப் பலமாகிப் போனது. அவர்கள் பக்கம் மக்களை அணிதிரட்ட எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பயன்தராத காரணத்தால், தமிழீழ தாகத்தோடு தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள் பக்கம் நிற்கும் தமிழ் மக்களைப் பிரித்து எடுப்பதற்காக, அவர்களது தேசிய மீள் எழுச்சி நாளான மாவீரர் தினத்தைக் குறி வைத்தனர். அதுவும், கேவலங்களில் முடிவடைந்ததுடன், அதில் பொறுப்பாக நின்றவர்கள் நட்டக் கணக்கைக் காட்டிவிட்டு, நழுவி விட்டார்கள். நடாத்தப்பட்ட போட்டி மாவீரர் தினத்துக்கான கணக்கை மக்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. மக்கள் கணக்குக் கேட்டுத் தொந்தரவு பண்ணும் நிலையை மாற்றுவதற்கு முடியாவிட்டால், மக்களிடம் சென்று பணம் கறப்பது முடியாத காரியம் ஆகிவிடும் என்பதனால், அந்த மூன்றாவது அமர்வு அரங்கம் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது. பிரதமர் விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார் அறிவாய் அல்லவா என்றது வேதாளம்: ஆமாம் அறிவேன் என்றான் விக்கிரமாதித்தன். அதைப் பொறுக்க முடியாத ஒரு பெண்மணி தனது தாலியைக் கழற்றி ருத்திரகுமாரன் கையில் கொடுத்து, அவரைத் தேற்ற முயன்றார். அங்கு இருந்த இன்னொரு மனிதர், தனது மனைவியிடமும் தாலிக் கொடியைப் பறித்துத் தருவதாக பிரதமரிடம் வாக்குறுதி வழங்கினார். இப்போது கேள்விக்கு வருகின்றேன் என்றது வேதாளம். அந்தப் பெண் எதற்காகத் தன் தாலிக்கொடியை பிரதமரிடம் வழங்கினார் ? அமெரிக்காவில் வாழும் அவரிடம் பணம் இல்லையா ? அல்லது, அவரது தாலிக்கொடியைப் பெற்றுக்கொண்டவர் மனிதனே இல்லையா ? இதற்கு நீ சரியாகப் பதில் சொல்லாவிட்டால், உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று வேதாளம் நிறுத்தியது. விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.... சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ள முடியாத புலம்பெயர் தமிழர்களது போர்க் குணத்தை மழுங்கடித்து, அவர்களை ஜனநாயக கூண்டுக்குள் அடைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறைக்காக மக்களிடம் போகும் அளவிற்குத் தரமானவர்களாக பொறுக்கி எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவரும் இவ்வமைப்பில் இல்லை. எனவே, ஏதாவது ஒரு �ஸ்ரண்ட்� அடிப்பதாக நினைத்து பிரதமர் மீண்டும் தன்னைக் கேலிக்குரியவராக நிரூபித்துள்ளார். பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்களும், வங்கி இருப்பும் கொண்ட ஜெயலிங்கத்தின் மனைவி, விரும்பியிருந்தால் இலட்சங்களைக் கூடப் பணமாக வழங்கியிருக்க முடியும். அதை விட்டு, சில ஆயிரம் பெறுமதியான தாலிக்கொடியைக் கொடுத்ததன் மூலம், தமிழ்ப் பெண்களின் தாலிக்கொடிகளைக் குறி வைக்கும் பிரதமரின் திட்டத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைத்தையும் நன்றாகப் புரிந்துவைத்துள்ளார்கள் ! எந்தச் சவால் வந்தாலும் சிந்தித்துச் செயல்படுவார்கள். தமிழீழம் என்ற இலக்கை அவர்கள் அடைவார்கள் என்று சொல்லி முடித்தான் விக்கிரமாதித்தன் ! இதைக் கேட்ட வேதாளம், சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா ! ஆனால், நீ வாய்திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுச் செல்கிறேன். இதோ பார்� இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக்கொள்� என்று கூறி நழுவிச் சென்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

சுன்னாகத்தில் வசமாக சிக்கிக்கொண்ட காதல் ஜோடிகள் !

சுன்னாகத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து இரு காதல் ஜோடிகள் கிராம அலுவலர்களினால் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது. சுன்னாகம் மேற்கில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகம் என அயலவர்களினால் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு வந்தன. குறிப்பிட்ட தனியார் விடுதி பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்தமை தொடர்பாக பிரதேச சபையும் குறிப்பிட்ட விடுதி உரிமையாளரை அழைத்து விடுதியைப் பதிவு செய்யும் படியும் வலியுறுத்தி இருந்தது. இந் நிலையில் நேற்று நண்பகல் கிராம அலுவலருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலர் ஏனைய அயல் கிராம அலுவலர்களையும் பிரதேச சபைத் தலைவர் பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரையும் இணைத்துக்கொண்டு பொலிசாரின் உதவியுடன் குறிப்பிட்ட விடுதியைச் சுற்றிவளைத்துத் தேடியபோது இரண்டு காதல் ஜோடிகள் வசமாக மாட்டிக்கொண்டார்கள். சுன்னாகம் பகுதியில் பல பதிவு செய்யப்படாத சட்டவிரேதமான விடுதிகள் இயங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழில் காதலர்கள் ரூம் போடுவது என்பது சர்வ சாதாரணமான விடையமாகப் போய்விட்டது. இதனால் தமது வீடுகளையும் கட்டிடங்களையும் உரிமையாளர்கள் சிலர் விடுதிகளாக மாற்றி அவற்றை காதலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் வாடகைக்கு விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத் தமிழர்களைப் பழிவாங்கும் எண்ணமே இலங்கைத் தமிழர்களுக்கெதிரான போர்!

இந்தியாவில் உள்ள மலையாளி மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பல நாட்களாகத் தொடர்ந்தும் முறுகல் நிலை காணப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இலங்கையின் அயல் நாடாகவும் ஆசியாவின் பிராந்திய ஆதிக்க சக்தியாகவும் விளங்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கேரளாவின் மலையாளிகளுக்குமான முறுகல் தொடர்கதையாகி வருகின்றது. தமிழக தமிழர்களுடன் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களுடனும் மலையாளிகள் தொடர்ந்து முரண்பட்ட அல்லது எதிர் நிலையே எடுத்து வருவதை நாம் கடந்தக் கால வரவாற்றினை எடுத்துப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழக தமிழர்களை பழி வாங்கும் எண்ணத்துடனயே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவின் மத்திய அரசிலும் சர்வதேச ரீதியாகவும் மலையாளிகள் எடுத்து வருகின்றமை கண்கூடு. இந்திய வெளியுறவுத்துறையில் கோலோச்சிய சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் ஆகிய மலையாளிகள் இலங்கைத் தமிழர்களின் தொப்புல் கொடி உறவுகளான தமிழகத்தின் கதறலை காதில் வாங்காமல் மகிந்த அரசின் ஊது கோலாகவும் சேவகர்களாகவுமே செயல்பட்டு வந்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவு தலைவர் கைது! - சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை பொலிஸாரின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை

Saturday, December 24, 2011

நிர்வாண காட்சியில் நடிகை பூஜா காந்தி!! கிரைம் படத்துக்காக ரகசிய ஷூட்டிங்!

கிரைம் படத்துக்காக நடிகை பூஜா காந்தி நடித்த நிர்வாண காட்சி படமானது. நிர்வாண காட்சியில் பூஜா பயமில்லாமல் நடித்தார் என்று இயக்குனர் கூறினார். தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் ‘தண்டுபால்யா’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமானது. இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: காதல் படங்களை இயக்கி வந்த நான் வித்தியாசமான கிரைம் கதை இயக்க முடிவு செய்தேன். இதற்காக தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதையை தேர்வு செய்தேன். 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இதை படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். ‘நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும்’ என்றேன். யோசித்து சொல்ல அவகாசம் தரும்படி கேட்டார். 3 வாரங்களுக்கு பிறகு சம்மதித்தார். அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இக்காட்சி படமாக்கப்பட்டபோது பட யூனிட் ஆட்கள் தவிர வேறு யாரும் ஷூட்டிங் அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை. பயமின்றி இக்காட்சியில் பூஜா நடித்தார். இவ்வாறு ஸ்ரீனிவாச ராஜு கூறினார்.

தமிழர்களின் எதிரி சிங்களவர்கள் அல்ல மலையாளிகளே

இலங்கையின் அயல் நாடாகவும் ஆசியாவின் பிராந்தி ஆதிக்க சக்தியாகவும் விளங்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கேரளாவின் மலையாளிகளுக்குமான முறுகல் நிலை நீண்ட நெடும் நாட்களாகவே தொடர்ந்து வருகின்றது. தமிழக தமிழர்களுடன் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களுடனும் மலையாளிகள் தொடர்ந்து முரண்பட்ட அல்லது எதிர் நிலையே எடுத்து வருவதை நாம் கடந்தக் கால வரவாற்றினை எடுத்தப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழக தமிழர்களை பழி வாங்கும் எண்ணத்துடனயே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவின் மத்திய அரசிலும் சர்வதேச ரீதியாகவும் மலையாளிகள் எடுத்து வருகின்றமை கண்கூடு. இந்திய வெளியுறவுத்துறையில் கோலோச்சிய சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் ஆகிய மலையாளிகள் இலங்கைத் தமிழர்களின் தொப்புல் கொடி உறவுகளான தமிழகத்தின் கதறலை காதில் வாங்காமல் மகிந்த அரசின் ஊது கோலாகவும் சேவகர்களாகவுமே செயல்பட்டு வந்துள்ளார்கள்.

'உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள்'

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தயாரிப்பில் உருவான 'உச்சிதனை முகர்ந்தால் ' திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் பல சிக்கல்கள் எதிர் கொள்வதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலையின் தேவையினை உணர்த்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிகவும் அழுத்தம் திருத்தமாக படமாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கொடூரக் கொலைகள், பாடசாலை மீதான விமானத் தாக்குதல்கள், தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்சிகளும் ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்ட 'இருப்பாய் தமிழாய் நெருப்பாய் நீ! இழிவாய் கிடக்க செருப்பா நீ!' என்ற உணர்ச்சி ததும்பும் பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசியத்தலைவர் அவர்களின் தம்பி என்றும் தன்னைக் கூறி ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழகத்தில் உரத்து குரல் கொடுத்த சீமானும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்ச்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படச் செய்திகள் எதனையும் வெளியிடாது இருட்டடிப்பு செய்வதோடு இவர்களது கட்டணம் செலுத்திய விளம்பரங்களைக் கூட பிரசுரிக்க மறுத்துவருகின்றனர். அதனையும் தாண்டி சென்னை தவிர்ந்த பிற இடங்களில் திரையரங்குகளை பெறுவது கூட கடினமாக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணமாக உணாச்சியுள்ள கிராமப்புற மக்களிடம் இது போன்ற விடயங்கள் சென்றடைவதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இவ்வாறான முட்டுக்கட்டைகளின் பின்னால் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

Thursday, December 22, 2011

துமிந்த மீதான துப்பாக்கி வேட்டுகள்: வெளியானது எக்ரே படங்கள்

முல்லேரியா சூட்டுச் சம்பவத்தில் போது தலையில் சூடுபட்டு பாரிய காயங்களுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவிற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகளை காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினரது தலையில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தலையில் பட்ட துப்பாக்கி சூட்டின் காரணமாக ரவைகள் நுள்நுழைவது மற்றும் வெளிவருவதாக எக்ரே படங்களும் இதில் அடங்கும். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவிற்கு துப்பாகி வெடி விழுந்தது எவ்வாறு? மற்றும் அவருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதி நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமாந்த வர்ணகுலசூரிய, ஆர் துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்ட காயங்களை காட்டும் 19 ஸ்கேன் படங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார். இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவினது மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை உள்நுழைந்திருப்பது மற்றும் வெளியேறியிருப்பது தொடர்பில் அந்த படங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி பிரயோகமானது 10 லிருந்து 30 சென்ரி மீட்டர் தூரத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா

தமிழ் திரையுலகில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் மங்காத்தா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகன் சூர்யா நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுகுறித்து வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, எனது அடுத்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு புதுவித சந்தோஷத்தை தரும். சூர்யாவிடம் ஒரு கதை கூறினேன். அவருக்கு அக்கதை பிடித்து இருந்தது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை வெளிவந்த பாலிவுட் திரைப்படங்கள் அனைத்துமே சாதாரண காணொளி கருவியில் எடுத்துவிட்டு அதனை முப்பரிமாணம்(3D) வடிவத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் எனது படத்தினை இயக்கும் போதே அதனை முப்பரிமாண காணொளி கருவியில் படம்பிடிக்க இருக்கிறோம். இதற்காக வெளிநாட்டில் இருந்து பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். என்னுடைய முந்தைய படங்களை போலவே யுவன் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். வேறு யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்வருகிற 2012ல் இதற்கான முறையான அறிவுப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

அறிவின் உச்சக்கட்டம்: Logo ஒன்று உருவாக்குவது எப்படி?

அறிவின் உச்சக்கட்டம்: Logo ஒன்று உருவாக்குவது எப்படி?: ஒவ்வொரு நிறுவனங்களும் தனக்கு என்று ஒரு (Logo) சின்னம் வைத்து இருக்கும்.இது சிறிய நிறுவனம் தொடக்கம் பாரிய அளவிலான நிறுவனங்கள் வரை அனைத்திலும்...

அறிவின் உச்சக்கட்டம்: பகுதி 03 - Google இடம் Domain வாங்குவது எப்படி?

அறிவின் உச்சக்கட்டம்: பகுதி 03 - Google இடம் Domain வாங்குவது எப்படி?: Card Number எல்லாம் சரியாக கொடுத்தும் ஏன் இணையத்தில் பயன்படுத்தி கொள்ள முடியாமல் இருக்கிறது? என்று பொதுவாக எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்க...

Wednesday, December 21, 2011

ஒரே படத்தில் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி!!

இளம் முன்னணி ஹீரோக்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுகுறித்து வெங்கட் பிரபு கூறியதாவது: ‘மங்காத்தா’ ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். இதற்கான ‘ஒன் லைன்’ கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி - கமல்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார். இதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான திரைக்கதை ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம்.

அனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை “நண்பன்” பட வெளியீட்டிற்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார். இதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ராணா படத்தின் படப்பிடிப்பு திகதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 20, 2011

சரியாக நடிக்காத படியால் கன்னத்தில் அடிவாங்கியும் தளராத அபிஷேக் பச்சன்

இந்நிலையில் இந்தியாவின் பத்திரிக்கையான இந்தியா டுடே நடத்தும் இளைஞர் மாநாடு 2011(Youth summit) நிகழ்ச்சிக்காக இன்று(10.12.2011) பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சென்னை வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் பேசுகையில், தனுஷ் நடித்த திரைப்படங்கள் முழுவதையும் பார்த்தேன். அபார நடிப்புத்திறமை கொண்டவராக செயற்படுகிறார்.

நான் தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது சொல்கிறேன் தனுஷ் சம்மதித்தால் அவர் இயக்கத்தில் நடிக்கத் தாயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் நடித்த 17 திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. ஆனாலும் இன்று இத்துறையில் கம்பீரமாக வலம் வருகிறேன். பெரிய நடிகன் என்ற நினைப்பு எனக்குக் கிடையாது. என்னை நானே சுய விமர்சனம் செய்து கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். நான் நடித்த திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றேன். திரைப்படம் முடிந்து வெளியில் வந்த பொழுது ஒரு பெண் என் கன்னத்தில் அறைந்து விட்டு உன் தந்தைக்கு இருக்கும் பெயரை அசிங்கப்படுத்தாதே என்று திட்டினார்.

அன்று தான் உண்மையாகவே நான் எவ்வளவு கேவலமாக நடிக்கிறேன் என்று தெரிந்தது. தூக்கம் வராமல் நடு இரவில் என் தந்தையை எழுப்பி, எனக்கு என் மீதே வெறுப்பாக இருக்கிறது. பேசாமல் வேறு வேலை செய்யட்டுமா? என்று கேட்டேன் அதற்கு அவர், உன்னை நீயே விமர்சித்துக் கொள். அதை செய்யாமல் எந்த முடிவையும் எடுக்காதே என்று கூறினார். அந்த பதில் என் தவறுகளை அறியத் தூண்டியது.

உடனடியாக எனது அனைத்து திரைப்படங்களையும் பார்த்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நோட்டுகளில் என் தவறுகளைக் குறித்துக் கொண்டேன். இளைஞர்களுக்கு இதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன்.

உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள் தவறை அறிந்து கொள்ளாமல் மற்ற வேலைகளை நாடாதீர்கள் அதுவும் தவறாகவே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அமலா பாலுக்கு காதல் பரிசாக ஆயிரம் பார்பி கேர்ள் பொம்மைகள் !

காதல் கதையில் அமலாபால் பார்பி கேர்ள் போல் மேக்கப் அணிந்ததால் ஆயிரக்கணக்கில் பார்பி கேர்ள் பொம்மை வாங்கியதாக கூறினார் இயக்குனர். அதர்வா, அமலாபால் நடிக்கும் படம் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’.

இப்படம் பற்றி இயக்குனர் எல்ரெட் குமார் கூறியதாவது: இளம் காதல் ஜோடிகளின் கதையாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக ‘ஒருமுறை’ என்ற ஒரு பாடல் மட்டுமே அடங்கிய சிடி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் வெளியிடப்பட்டது. முழு தொகுப்பும் அடங்கிய பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் கவுதம் மேனன், கே.வி.ஆனந்த் வெளியிட்டனர். அமலா பாலுக்கு இப்படத்தில் பார்பி கேர்ள்போல் மேக்கப் அணிவிக்கப்பட்டது.

அவருக்கு காதல் பரிசு வழங்கும் காட்சிக்காக ஏராளமான பார்பி கேர்ள் பொம்மைகள் வாங்கப்பட்டன. இந்த காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் காதல் திருவிழா என்ற தலைப்புடன் பாடல் கேசட் விழா நேற்று நடத்தப்பட்டது.

விழா நடக்கும் அரங்கு முழுவதும் ஆயிரக்கணக்கில் பார்பி கேர்ள் பொம்மைகள் வாங்கி அலங்கரிக்கப்பட்டது. அழைப்பிதழிலும் பார்பிகேர்ள் பொம்மை வைத்து வழங்கப்பட்டது.

இப்ப கொலைகாரன் இனி கொள்ளைக்காரன் எண்டு பேச்சு வரும்! அதையும் நம்பும் இந்த சனங்கள்!

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி அரிமா சங்க மாநாட்டில் கலந்து கொண்ட வைகைப்புயல் வடிவேலு தன்னைப் பற்றி தினமும் ஒரு செய்தி வந்து கொண்டிருப்பது குறித்து தான் பேசியபோது கூறினார்.

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இன்று நடந்த அரிமா சங்க மண்டல மாநாட்டில் வடிவேலு பேசியதாவது:

சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதற்கு வாய்ப்பு இல்லாமலோ அல்லது யாருடைய கட்டாயத்தின்பேரிலோ அல்ல. அது காலத்தின் கட்டாயம். இது நானாக எடுத்த முடிவு. எல்லோரையும் சிரிக்க வைக்கும் எனக்கும் சில பிரச்னைகள் உள்ளன.

பிரச்னைகளை வைத்துக் கொண்டு சினிமாவில் நடித்தால் அதை முகம் காட்டிக் கொடுத்துவிடும். எனவேதான் ஒதுங்கி இருக்கிறேன். ஆனாலும் என்னைப் பற்றி தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நான் கொலைசெய்துவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. இன்னும் கொஞ்ச நாளில் கொள்ளைக்காரன் என்றும் செய்தி வரும். என்று வடிவேலு பேசினார்.

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது !

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை.

காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை.(மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை

சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும்.

ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது).

இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை.

அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான். ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்ரகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

கிருஸ்டியன் சயன்ஸ் மானிட்டர் தகவல் குறிப்புகளில் இருந்து:

மொழிபெயர்ப்பு: கண்ணன்.

Monday, December 19, 2011

சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம்

சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தின் களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று(19.12.2011) தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.

சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள் சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல் கூறியுள்ளார்.

இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘ குறிப்பிட்டுள்ளது.

இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர் சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும், ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் “தாக்குதல் அணி“ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.

Sunday, December 18, 2011

இருப்பாய் தமிழா நெருப்பாய் ! – கவிஞர் காசி ஆனந்தனின் திரைப்பாடல்


‘இருப்பாய் தமிழா நெருப்பாய் – இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ‘ என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.தமிழீழ விடுதலைப் போராட்ட பாடலில் இருந்த இந்த வரிகளும் அதை புனைந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழ் திரைப்படப் பாடல் துறைக்கு வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆசை.

ஈழ சோகங்களை இலக்கிய வடிவில் படைத்திருக்கும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற புகழேந்தி தங்கராஜின் திரைப்படம் மூலம் தமிழர்களின் அவ்விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் காசி ஆனந்தன்.



“இருப்பாய் தமிழா நெருப்பாய் … நீ!
இழிவாய் கிடக்க செருப்பா… நீ!

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே…
துடித்து துடித்து உடல் சிதைகிறதே…
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே…
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்? – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)

எரிமலை தணியுமா… தண்ணீரில்
கடல் அலை கரையுமா… கண்ணீரில்
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது…
பட்டினியோ உணவானது…
போராடு நீ வீரோடு!

மின்னலின் தொடர்ச்சியே… இடியாகும்
இன்னலின் தொடர்ச்சியே… விடிவாகும்
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
மாந்தர் உயிரோ நிலையற்றது…
மானம்தானடா நிகரற்றது…
போராடு நீ வீரோடு! ”

இப்படத்திற்கு பாடல் எழுத தூண்டியது எது ? என்றதற்கு, அவர் ” உச்சிதனை முகர்ந்தால் மட்டகளப்பு நாவக்குடா 13 வயது சிறுமி புனிதவதி போரின் பெயரால் சீரழிக்கப்பட்டதை உணர்த்தும் கதை. ஆனால் அது புனிதவதி பற்றிய கதை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தின் சோக வரலாறு. எம் தேசத்தில் பல்லாயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவால் சீரழிக்கப்பட்டுள்ளனர். 89 ,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இப்படம் ஒரு தேசத்தின் பெருமூச்சு.. ஒரு தேசத்தின் விக்கல்.. ஒரு தேசத்தின் கண்ணீர்.. ஒரு தேசத்தின் துடிப்பு.

ஈழத்தில் சிங்கள மயமாக்கலால் பெண்சமுதாயம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் திரைப்படமே ‘உச்சிதனை முகர்ந்தால்’. துப்பாக்கி, குண்டுகள், பீரங்கிகளை போலவே இலக்கியமும், கதையும் விடுதலையை மீட்டெடுக்கும் போராட்டக் கருவி தான் என்பதை இப்படம் உணர்த்தும்.

நான் எந்த உணர்ச்சியுடன் பாடலை எழுதினேனோ அவ்வுணர்ச்சியோடு இசையமைத்துள்ளார் இமான்” என்றார் காசி ஆனந்தன்.
” கவிஞர் காசி ஆனந்துடன் இசைப்பணி செய்தது ‘என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம் ” என்ற குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

ஆனால் அவரின் வீரிய நெருப்பு வரிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது திரைப்பட தணிக்கை துறை. ‘ இருப்பாய் தமிழா நெருப்பாய் ‘ என்ற எடுப்புடன் (பல்லவி) தொடங்கும் பாடலில் பின்வரும் வரிகளான ‘எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்,அவள் தாய் மண்ணை எங்கே புதைப்பார்கள் ! அடிமைக்கு விடுதலை நாடாக்கு’போன்ற பாடல் வரிகளை வெட்டியுள்ளனர் திரைப்பட தணிக்கை துறையினர்.

உணர்ச்சி தூண்டும் விதத்தில் இவ்வரிகள் அமைந்திருந்ததால் இவை நீக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த தணிக்கை முறை கைவிடப்பட்டு சுதந்திரமான படைப்புகளுக்கு அங்கீகாரம் தருகின்றன. அப்படி நம் நாட்டில் இல்லாவிட்டாலும், சிலர் மனதை குளிர்விக்க பலர் மனதை வாடசெய்யப்படும் தணிக்கைகளை குறைக்கலாம் .

ஓர் படைப்பை தணிக்கை செய்வது என்பது ‘ஓர் படைப்புக்கு முழு சுதந்திரம் இல்லை’என்பதை உணர்த்தினாலும், ஒரு படைப்பை தணிக்கை செய்வது நாகரிகம் அற்ற தன்மையே என்பது பல படைப்பாளிகள் நெஞ்சில் சுமக்கப்படும் கருத்து.

பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே!!


இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது
இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.


பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும்.

பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும்.

தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period​) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது.

காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே.
எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.


இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே.அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே இலகுவழியாகும்.

Monday, December 12, 2011

ஒருதமிழனை 9 நாடுகள் சேர்ந்து கொன்றது பெரும்வீரமில்லை அது துரோகம், 7 ம் அறிவு திரைக்கதையுடன் ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட அநீதிகள் ஓர் ஒப்பீடு.


சமூகத்தில் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள், தமிழ் இன ஒடுக்குமுறைகள் போன்றவை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது.

அதன் வெளிப்பாடே என்னால் உருவாக்கப்பட்ட காணொளிகள். அதில் ஒன்றே கீழே காணப்படும் காணொளி.

தென்பகுதிப் பாடசாலை நிகழ்வுகளில் இராணுவம் பங்குபற்றாத நிலையில், ஏன் வடக்கு கிழக்கு கல்விக்கூடங்களில் இராணுவத்தினர், சீருடையுடனும், துப்பாக்கியுடனும் பங்குபற்ற வேண்டும் என பாராளுமன்றில் பா.உ. சிறிதரன் கேள்வி

எளிய முறைகளின் மூலம் புற்றுநோயை தடுக்கலாம்: மருத்துவர்கள் தகவல்


வாழ்வியல் முறைகளில் சில எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று லண்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் முதலிடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமன்றி பித்தப் பை, சிறுநீரகம், இரப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் புற்றுநோய் உருவாக புகைப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 25 பேரில் ஒருவருக்கு அவர் சார்ந்த பாதிப்பு தொழிலால் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் ஆஸ்பெஸ்டார் கூரையின் கீழ் பணிபுரிவோருக்கு புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

33 பேரில் ஒருவருக்கு தொற்றுநோய் மூலம் புற்றுநோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பை புற்றுநோய் உருவாக்குவதில் பாப்பிலோமா வைரஸ்(ஹெச்பிவி) முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

2010-ம் ஆண்டு லண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1,06,845 பேர்களில் 34 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். இவர்களிர் சிலருக்கு மதுபான பழக்கமும் இருந்துள்ளது. கூடுதல் எடை உள்ளவர்களும் புற்றுநோயால் தாக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

ஆண்களில் 6.1 சதவீதம் பேர்(9,600) போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடாததால் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல 4.6 சதவீதம் பேருக்கு(7,300) அவர்கள் சார்ந்த தொழில் காரணமாகவும், 4.1 சதவீதம் பேர்(6,500) மதுபான பழக்கம் காரணமாகவும், 3.5 சதவீதம் பேர்(5,500) கூடுதல் எடை காரணமாகவும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களில் 6.9 சதவீதம் பேர்(10,800) கூடுதல் எடை உள்ளவர்களாக இருந்தனர். 3.7 சதவீதம் பேருக்கு(5,600) ஹெச்பிவி மூலமாகவும், 3.4 சதவீதம் பேருக்கு(5,100) போதுமான பழங்கள், காய்கறிகள் சாப்பிடாததாலும், 3.3 சதவீதம் பேருக்கு(5,000) மதுபான பழக்கம் காரணமாகவும் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை, போதிய பழம், காய்கறிகள் சாப்பிடாதது, கூடுதல் எடை, மதுபான பழக்கம், போதுமான அளவு சூரிய ஒளி படாதிருத்தல், பணிச் சுமை, நோய் தொற்று, கதிர்வீச்சு, போதிய உடற்பயிற்சி இல்லாதது, தாய்ப்பால் புகட்டாதது, ஹார்மோன், பச்சை மாமிசம், போதிய நார்ச்சத்து உணவுகளை சாப்பிடாதது, அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மதுபானம் சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு இரப்பைக் குடல் புற்றுநோய் ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய அளவு பழங்கள் சாப்பிடாததால் 9 சதவீதம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

முல்லை பெரியாறு விவகாரம் மௌனம் கலைப்பாரா விஜய் ?


இந்தியாவையே தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, முல்லை பெரியாறு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு கேரளாவில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் கேரள அரசிற்கு ஆதரவளித்து வருகின்றன.

முக்கியமாக மளையாள திரையுலகம் கேரள அரசிற்கு பெரும் ஆதரவளித்து வருகிறது.பெரிய ஜாம்பாவான்களிலிருந்து புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரைக்கலைஞர்கள் வரை கேரள அரசின் பின் நின்று குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் ஜாம்பாவான்களும், முக்கிய நடிகர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர். இதற்கு முன் ஏற்பட்ட காவிரி பிரச்சினையின் போது தமிழ் திரைக்கலைஞர்கள் ஆதரவு அளித்தது தமிழக அரசிற்கு பக்கபலமாக இருந்தது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு தான் கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.

விஜய்யின் மேல் கொண்ட அன்பினால் அவருக்கு கேரளாவில் சிலை ஒன்றை நிறுவி தங்கள் பாசத்தை நிரூபித்தனர் கேரள ரசிகர்கள். காவிரி பிரச்சினையின் போது விஜய் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்பை காட்டினார்.

கேரளாவில், தீபாவளிக்கு வெளியான மளையாளப் படங்களை விட, விஜய் நடித்து வெளியான வேலாயுதம் படத்திற்கே மாபெரும் வறவேற்பு காணப்பட்டது.சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் வாய் திறக்காமல் இருந்தால், இந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களும் சில நாட்களில் அடங்கி விடுவார்கள் அல்லது அடக்கப்பட்டுவிடுவார்கள்.

விஜய் போன்ற திரையுலக முக்கிய நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா? இல்லை அவர்களது மௌனம் தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?????????????????

யாழ் கரவெட்டியில் ரச்சத‌ மலைபாம்பு அதிர்ச்சியில் மக்கள்(படங்கள் இணைப்பு)



தச்சந்தோப்பு கோவிலுக்கு முன்னால் இன்று காலை அகப்பட்டது ரச்சத மலபாம்பு

Saturday, December 10, 2011

செல்வசன்னிதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள பாலம் ஆபத்தான நிலையில்




வல்லையில் இருந்து செல்வசன்னிதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது,இதனால் பயணம் செய்யும் வாகன‌ங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றன.இப் பாலத்தை சம்மந்தப் பட்டவர்கள் உடனடியாக தலையிட்டு மக்களின் பாதுகாப்பான பய‌ணத்தை உறுதிப் படுத்தவும்,

யாழ்.மாணவி முன் நிர்வாணக் காட்சி! கல்லடி வாங்கிய இராணுவச் சிப்பாய்!!


பாடசாலை விடுமுறைதினமான நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவி முன் நிர்வாணமாக இன்று அவரை அழைத்த இராணுவச் சிப்பாய்க்கு பொதுமக்கள் கல்லடி வழங்கியுள்ளனர்.

அளவெட்டிப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மேற்படி மாணவியை முகாமிலிருந்த இராணுவச் சிப்பாய் இவ்வாறு நிர்வாணமாக நின்று கூப்பிட்டு்ள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து அப் பகுதியில் திரண்ட பொதுமக்களை ஏனைய இராணுவத்தினர் தலையிட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் இராணுவப் பொறுப்பதிகாரியிடம் அம் மாணவினிய் பெற்றோர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழமையாக அப் பகுதியில் பாடசாலை விட்டு வெளியேறும் மாணவிகளுடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் அரைகுறை ஆடைகளுடன் நின்று பாலியல் சேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கலக்கும் ஸ்ரேயாவின் இங்கிலீசு முத்தம்


ஸ்ரேயாவ என்னமோ நினைச்சன்.. ஆனா இங்கிலீசு பெட்டைகள விட என்னமா கிஸ் அடிக்குது! ஒரு இங்கிலீசு படம் பார்த்த பீலிங்க்ஸ் வருது , பரவாயில்ல வாயுள்ள பிள்ளை பிளைச்சிடும்!

இதில கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படங்களுடன் உங்களுக்கு நெருக்கமானவருடன் முயற்சித்துப்பாருங்கள், அல்லது முயற்சித்து அவர்களுடன் நெருக்கமாகுங்கள்!

யாழில் 15 வயதுச் சிறுமி 1 மாதகாலம் பாலியல் வல்லுறவு ! 21 வயது இளைஞன் கைது!!


திருமணம் செய்வதாக 15 வயதுச் சிறுமியை ஏமாற்றி ஒரு மாதகாலம் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு தனக்கு இந்தப் பெண் வேண்டாம் என அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்த 21 வயது இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவுசெய்யுமாறு யாழ் நீதிவான் ஆ.ஆனந்தராஜா இன்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை குறித்த நகருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸாரின் தேடுதலில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

குறித்த இளைஞனை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறும் சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையதத்pல் ஒப்படைக்குமாறு யாழ் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ப்ரியாமணியின் மசாஜ் வீடியோ - குழந்தைப்பிள்ளைகள் இந்தப்பக்கம் வரக்கூடாது!

இந்த நடிகைகள் மசாஜ் பண்ணுறத பாக்குறதே தனி சுகம்! அதிலும் மார்கெட்டில் சூடு பிடித்திருக்கும் நடிகையானால் சொல்லவே தேவையில்லை இளைஞர்களது செல்போனில் இதுதான்.

காலாவதியான நடிகைகளிலும் ஒரு சிலருக்கு என்றுமே மதிப்பிருக்கும், ஏற்கனவே த்ரிஷாவின் மசாஜ் வீடியோ வேர்ல்ட் புல்லா பேமஸ் ஆயிடுச்சு! இது கொஞ்சம் லேட்டா வெளிவந்திருக்கு.

கனடாவில் குடியேறிய இலங்கையர்களால் நாட்டுக்கும் நன்மை! அவர்களுக்கும் வெற்றி!!


இலங்கை, இந்தியா மற்றும் தென்னாசிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியவர்களால் கனடாவுக்கு நன்மையளித்திருப்பதாகவும் அத்துடன் பல்வேறு துறைகளிலும் இன்று அவர்கள் வெற்றி பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் என்றும் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் நோர்த் யோர்க் நகரில் பல்லின பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடிய கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி புகழாரம் சூட்டினார்.

கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கனடாவில் இயங்கும் தேசிய ஊடகங்களைவிடவும் பல்மொழி ஊடகங்களே இந்த நாட்டின் பல்கலாச்சாரக் கொள்கைக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன.

எனவே அவற்றையே நான் அதிகம் மதிப்பதும் படிப்பதும் உண்டு. எனக்கு புரியாத மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பற்றியும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் அறிந்து கொள்வேன்.

கனடாவில் குடியேறியுள்ள பல்லின மொழிசார்ந்த குடிவரவாளர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் கனடாவின் பொருளாதாரா வளர்ச்சிக்கும் தங்களால் ஆன பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள்.

இலங்கை இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளிலிருந்து வந்து கனடாவில் குடியேறியவர்கள் பல்வேறு துறைகளில் இன்று வெற்றி பெற்றவர்களாக கனடாவிற்கு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

Wednesday, December 7, 2011

வலைப்பந்து கிளப்புக்கு பணம் திரட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த மாணவிகள்!


வலைப்பந்து ஆடும் பெண்கள் தங்கள் கிளப்புக்கு பணம் திரட்ட புதிய வழி ஒன்றைக் கையாண்டுள்ளனர்.

Bristol பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு கலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு தங்கள் அணிக்கான செலவுகளை ஈடு செய்ய இந்த கலண்டர் மூலம் வரும் பணம் போதுமென அவர்கள் கருதுகிறார்கள்.

மாணவர்கள் இவ்வாறு போஸ் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை தோற்றுவித்துள்ளது.

சிங்களவர்கள் கோழைகல்ல! அவர்களை சோதிக்க வேண்டாம்!! - எச்சரிக்கிறார் சம்பிக்க


சிங்களவர்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்று சிங்கள எதிர்ப்பு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

ஜாதிக ஹெல உறுமயவினால், ஏற்பாடு செய்யப்பட்ட கங்கொடவில சோம தேரரின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எத்தகைய எதிர்ப்புகள் இருந்தாலும் வடக்கில் சிங்களவர்கள் மீளவும் குடியேற்றப்பட வேண்டும்.

1981இல் யாழ்ப்பாணத்தில் 21,000 சிங்களவர்கள் வசித்ததுடன் புத்த மதமும் அங்கிருந்தது.

சிறிலங்கா பாதுகாப்புப் படையில் சிங்கள இளைஞர்களால் தான், விடுதலைப் புலிகளிடம் இருந்து உயிர் தப்பி ஆனந்தசங்கரியால் உயிர்வாழ முடிகிறது என்பதை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சம்பந்தனுக்கு கொழும்பில் வாழும் உரிமை உள்ளது. அதுபொலவே சிங்களவர்கள் வடக்கில் வாழ்வதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எமது நாட்டில் வாழ்வதற்கான எமது உரிமை மறுக்கப்படுகிறது.

எமது மக்களை கொன்ற தீவிரவாத சந்தேகநபர்கள் 11 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவொரு சிங்களவராவது எதிர்ப்புத் தெரிவித்தாரா?

பழி கூறுவதற்கு சிங்களவர்கள் எவரும் வெளிநாடு சென்றதில்லை. ஆனால் சம்பந்தன் அதையே செய்கிறார்“ என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையான மங்களநேசன்! தூக்கி எறிந்தது ஈ.பி.டி.பி!!


யாழ் மாநகர மாநகர சபை மற்றும் ஈபிடிபி கட்சியின் உறுப்பினரான மனுவல் மங்களநேசன் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையினால் அவரை ஈபிடிபி கட்சி பணிகளில் இருந்து தற்காலிகமாக நிறுத்துவதாக அதன் உயர்மட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஈபிடிபி தலைமை அலுவலகதத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரனால் (கமல்) ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவல் மங்களநேசன் என்பவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில் அவர் பெண்கள் விடயத்தில் பலகில்லடி எனவும் யாழ் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகசத்தரிடம் தவறாக நடக்க முற்பட்டதாலும் அதேவேளை மதுவுக்கு அடிமையான ஒருவர் என்பதினாலும் இவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

மங்களநேசனின் தவறான நடவடிக்கைக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஈபிடிபி யாழ் அமைப்பாளர் கமல் தெரிவித்தார்.

இதேவேளை தான் அமைச்சர் டக்ளஸ், யாழ்.மாநகர மேயரின் ஊழல்களை வெளியிடுவேன் என அறிவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈபிடிபி இல்லாவிட்டால் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கட்சியில் நான் இணைவேன் என மங்களநேசன் தெரிவித்தார்.

அத்தோடு டக்ளஸ் மற்றும் மேயரின் பல கோடி ஊழல்களை எதிர்வரும் காலங்களில் ஆதாரங்களுடன் வெளியிடவுள்ளதாகவும் மங்கள நேசன் தெரிவித்துள்ளார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்தது கூட்டமைப்பு! தூக்கி எறிந்தது அரசு!!


கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன் இப் பேச்சுக்களில் சிறிய முறிவு நிலை ஏற்பட்டிருந்து பின்னர் ஒரு இனக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் இன்று பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான முக்கிய மூன்று விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற 16ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்பு இவற்றை செயற்படுத்த முடியாதென மறுத்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்
02.மாகாணத்திற்கு சட்டம், ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம்
03.அரச காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல்

போன்ற நாம் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஆனால் அந்த மூன்று கோரிக்கைகள் குறித்தும் நாம் அரச தரப்பிடம் விளக்கமளித்தோம். பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது." என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்தது கூட்டமைப்பு! தூக்கி எறிந்தது அரசு!!

கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன் இப் பேச்சுக்களில் சிறிய முறிவு நிலை ஏற்பட்டிருந்து பின்னர் ஒரு இனக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் இன்று பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான முக்கிய மூன்று விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற 16ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்பு இவற்றை செயற்படுத்த முடியாதென மறுத்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்
02.மாகாணத்திற்கு சட்டம், ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம்
03.அரச காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல்

போன்ற நாம் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஆனால் அந்த மூன்று கோரிக்கைகள் குறித்தும் நாம் அரச தரப்பிடம் விளக்கமளித்தோம். பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது." என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ஜனாதிபதியின் கடந்த வருட ஜநா உரையை நாங்களே எழுதிக் கொடுத்தோம்! - பிரித்தானிய நிறுவனம்

ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார்.

அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிநபர்களை பொறுப்புக் கூறுவதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

“சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நாங்கள் ஒரு குழுவை வைத்து பணியாற்றினோம். நாங்களே கடந்த ஆண்டு ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரையை எழுதிக் கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது“ என்று பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் கூறியுள்ளார்.

அத்துடன் 2010ம் ஆண்டில் சிறிலங்கா அதிபர் லண்டன் வருவதற்கு முன்னர் தமது நிறுவனம் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நவ சமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோரை தமது நிறுவனம் சந்தித்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

ஆனால் தாம் சிறிலங்கா அரசுடனான தொடர்புகளில் சட்டவிரோதமாக எதையும் செய்யுமாறு ஆலோசனை கூறவில்லை என்றும் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடகங்களில் சிறிலங்காவுக்கு சார்பாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் பொறுப்பை பெல் பொட்டிங்கர் நிறுவனமே ஏற்றிருந்தது.

Tuesday, December 6, 2011

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள்!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்.

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும்.

அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.

ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்கான சில வழிகள். பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை.

எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.

கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

Saturday, December 3, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை முறிவடைந்தது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்ற போது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்ற 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இவ்விவகாரம் ஆராயப்பட்டு இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் போது காணப்படும் இணக்கப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதெனவும் அச்சந்தர்ப்பத்தில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது உறுப்பினர்களின் பெயர்களை உடன் வெளியிடுமாறு கூட்டமைப்பினரை அரச தரப்பு கோரியதையடுத்தே பேச்சுக்களில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கூட்டமைப்பினர் அவ்வாறு தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடவில்லை எனில் தம்மால் பேச்சுக்களைத் தொடரமுடியாது என அரச தரப்பினர் கூற, இணக்கப்பாடு எட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைப்பதற்கு முன்னதாக தம்மால் பெயர் விபரங்களைத் தர முடியாது என கூட்டமைப்பு உறுதியாகக் கூற பேச்சுக்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் 1, 06, 14, 15ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலாம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவுக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் – அஜீத்தை இணைத்து படம் செல்வராகவன் பேட்டி!


விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது: ‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள்.

என்னைப் பொறுத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள்.

இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது.

எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார் விஜய்!


இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள்.

வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.

அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ‌ஒ‌ரே சாய்ஸ் விஜய் மட்டுமே.

எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.

இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய த

நிர்வாணமாய் FHM இதழுக்கு போஸ் கொடுத்த பாகிஸ்தான் நாட்டு அழகி (இணைப்பு)



பாகிஸ்தான் நாட்டு கவர்ச்சிப்பிரளயம் வீனா மாலிக் FHM இதழுக்கு நிர்வாணமாய் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார், ஏற்கனவே காஜல் அகர்வாலும் இதே இதழுக்கு இந்த மாதிரியான பிட்டுகளை வெளியிட்டு கலக்கியவர் , இதன் காரணமாக பல முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை கிளப்பியுள்ளன (ரசிகர்கள் சந்தோசமா இருந்தா அவங்களுக்கு பிடிக்காதே) ,

இந்த படம் FHM இதழில் வெளியானதால் வீனா மாலிக் உலகளவில் பிரபல்யம் பெற்றுவிட்டார், இந்த அழகியை இந்தியாவுக்கும் குத்தைகைக்கு எடுக்க தொன்றுதொட்டு முயற்சிகள் நடந்துவருகிறது கூடிய விரைவில் ஷங்கர் படத்தில் எதிர்பாக்கலாம்

இறுதி யுத்தத்தின் போது படுகொலைகள்! இராணுவத்திற்கு உத்தரவிட்டது அரசாங்கமே!!


சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் செய்தது என்பதற்கப்பால் இவ்வாறு செய்வதற்கான கட்டளைகளை இலங்கை அரசாங்கமே வழங்கியிருந்தது என படைத்தரப்பின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சாட்சியளித்துள்ளதாக The International எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஊடகத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்ட புலனாய்வுக் கட்டுரை ஒன்றிற்காக மேற்கொள்ளப்பட்ட செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால் இவ்வாறு வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான பல கொடூரங்கள் மேற்கொள்ளப்பட்டதை நேரடியாகக் கண்ட ஒருவரும் சாட்சி இந்த ஊடகத்திற்கு சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'படைத்தரப்பினர் மீது போர்க்குற்றங்களை முன்வைக்கும் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி, இலங்கையில் இறுதிக் கட்டப் போர் இடம்பெற்ற காலத்தில் படைத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது போர்க்குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த மற்றும் முற்றுகையிடப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்வதென்பது இறுதிக் கட்டப் போரின் போது வழங்கப்பட்ட கட்டளைக்கு அமையப் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.

சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைக்கு அமையவே விடுதலைப் புலிகளின் போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த விடுதலைப் புலிகளை கொன்று முடிக்குமாறு சிறிலங்கா படைத்தரப்பின் களமுனைத் தளபதிகளுக்கு கோத்தபாய ராஜபக்சவினால் பணிக்கப்பட்டதைத் தான் அறிந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'யார் இத்தகைய கட்டளைகளை வழங்கியிருப்பர்? விடுதலைப் புலிகளின் தீவிரமான உறுப்பினர்களைக் கையாளும் முறை இதுவா?' என சிறிலங்காவின் முன்னாள் படைத்தரப்பு உறுப்பினரைக் கேட்டபோது, சிறிலங்கா ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டு, படைத்துறைச் செயலரினாலேயே பணிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய முடிவுகளை எடுப்பதற்குரிய அதிகாரம் படைத்தளபதிகளுக்கு இல்லை என்று அவர் பதிலளித்தார்.

இதே பார்வையே அமெரிக்க இராஜதந்திரி Patricia Butenisஇனால் வெளிப்படுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

2010 ஜனவரி மாதம் 15ஆம் திகதியிடப்பட்ட தகவல் அறிக்கையில், இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்மீறல்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது சதோதரர் மற்றும் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட்ட நாட்டின் அரசாங்க மற்றும் படைத்துறைத் தலைமையே பொறுப்பேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் ஈடுபடுத்தப்பட்ட கருணா குழுவிற்கு சிறிலங்கா படைத்தரப்பினால் முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் முன்னாள் படை அதிகாரி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினருக்கு கருணா குழு எவ்வாறு உதவியது என்பது தொடர்பாக 2007ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியிடப்பட்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கடத்துதல் போன்றவை மூலம் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கான வாய்ப்பை இது சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற அறிக்கைகள், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நம்பிக்கைக்குரிய வேறு பல தூதரக தொடர்புகளாலும் முன்வைக்கப்பட்டதாகவும், துணை இராணுவக் குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதற்கான விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்ததாகவும் இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டிருந்தது.

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியின் குற்றச்சாட்டுகள் பொருந்துகின்றன.

வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோத்தபாயவினால் தெரிவு செய்யப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவே 'வெள்ளை வான்' கடத்தல் சம்பதங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரியினால் கூறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் சிறிலங்கா படைத்தரப்பினரால் விசாரிக்கப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் இதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உட்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான படுகொலை மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்களின் பின்னணியிலும் சிறிலங்கா அரசாங்கமே இருந்துள்ளது.

இவர் கூறுவது போல இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற போர் மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் சிறிலங்காவின் ஜனாதிபதி அல்லது படைத்துறைச் செயலாளர் ஆகியோரின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருப்பின், ஜெனிவா தீர்மானங்களுக்கு அமைய மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தமைக்காக அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

சிறிலங்கா படைத்தரப்பினரை நோக்கி வெள்ளைக் கொடிகளோடு வந்த மக்கள் அவர்களால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீண்டும் போர் முன்னரங்கங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத நேரடிச் சாட்சி ஒருவர் கூறுயுள்ளார். திட்டமிட்ட முறையிலும் கண்மூடித்தனமாகவும் பொதுமக்கள் மீது சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்கினர்.

3000 வரையான சாவடைந்த மக்களின் உடலங்கள் பரவியிருந்ததைத் தான் நேரடியாகக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்' என The International இல் குறிப்பிடப்பட்டுள்ளது.